'இந்தியா உலகின் விருப்பத் தேர்வு'

'இந்தியா உலகின் விருப்பத் தேர்வு'

2 mins read
6859f4d0-0f49-4692-a886-8ed1e1778743
-

விசா­கப்­பட்­டி­னம்: தென் மாநி­லங்­களில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள பிர­த­மர் நரேந்­திர மோடி, நேற்று ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தில் 15,233 கோடி ரூபாய் மதிப்­பி­லான உள்­கட்­ட­மைப்­புத் திட்­டப் பணி­களைத் தொடங்கி வைத்­தார்.

ஆந்­தி­ரப் பல்­க­லைக்­க­ழ­கப் பொறி­யி­யல் கல்­லூ­ரித் திட­லில் நடை­பெற்ற விழா­வில் அவர் உரை­யாற்­றி­னார்.

"இன்று உல­கம் நெருக்­க­டி­யில் சிக்­கிக் கொண்­டி­ருக்­கும்­போது, இந்­தியா பல துறை­களில் புதிய மைல்­கற்­களை அடைந்து வர­லாறு படைக்­கிறது. நமது வளர்ச்­சியை உல­கம் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறது," என்­றார் திரு மோடி.

அர­சின் அனைத்­துக் கொள்­கை­களும் சாமா­னிய மக்­க­ளின் நல­னையே மைய­மா­கக் கொண்டு உள்­ளன என்று கூறிய அவர், "இன்று தொடங்­கப்­படும் பொரு­ளா­தார வழித்­த­டம், ஆந்­தி­ரப் பிரதேசத்தில் வர்த்­த­கம், உற்­பத்தி ஆகி­ய­வற்றை அதி­க­ரிக்­கும் வகை­யில் இணைப்பை மேம்­ப­டுத்­தும்.

"இந்­தப் புதிய உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளால், ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் கட­லோ­ரப் பகு­தி­கள் விரை­வாக வளர்ச்­சி­பெறும்," என்று குறிப்­பிட்­டார்.

உலக நாடு­க­ளின் விருப்­பத்­தேர்­வின் மையப் புள்­ளி­யாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ள­தா­கத் திரு மோடி தமது உரை­யில் கூறி­னார்.

பிர­த­ம­ரின் 'கதி சக்தி' போன்ற திட்­டங்­கள் நாட்­டிற்கு அதிக அள­வில் வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ள­தாக அவர் சொன்­னார்.

'கதி சக்தி' திட்­டம், உள்­கட்­ட­மைப்பு வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­தி­யது மட்­டு­மன்றி, செல­வு­க­ளைக் குறைக்­க­வும் உத­வி­யுள்­ளது என்­றார் பிர­த­மர்.

உள்­கட்­ட­மைப்­பைப் பொறுத்­த­வரை ஒருங்­கி­ணைந்த பார்வை முக்­கி­யம். கடந்த காலங்­களில் தனிப்­பட்ட கோணத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளால் நாடு அதிக இழப்­பைச் சந்­தித்­துள்­ளது என்­றார் அவர்.

புதிய பொரு­ளா­தார வழித்­த­டம், 3,778 கோடி ரூபாய் செல­வில் ஆறு வழிச்­சா­லை­யாக அமைக்­கப்­பட உள்­ளது.

ராய்ப்­பூ­ருக்­கும் விசா­கப்­பட்­டி­னத்­திற்­கும் இடை­யில் 100 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு இது அமைக்­கப்­படும். கடல்வளம் சார்ந்த பொருளியலுக்குத் தற்போது முன்னுரிமை தரப்படுவதைச் சுட்டிய அவர், துறைமுக மேம்பாட்டின் அடிப்படையிலான திட்டங்கள் முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.