தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை

1 mins read
64307471-efad-43e0-a340-c0793282c28c
மைசூருக்கும் சென்னைக்கும் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று முன்தினம் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். படம்: இணையம் -

பெங்­க­ளூரு: பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று முன்­தி­னம் சென்­னைக்­கும் மைசூ­ருக்­கும் இடை­யி­லான வந்தே பாரத் ரயில் சேவை­யைத் தொடங்­கி­வைத்­தார்.

நாட்­டின் ஐந்­தா­வது இத்­த­கைய சேவை­யான இது தென்­னிந்­தி­யா­வின் முதல் வந்தே பாரத் விரைவு­ ர­யில் சேவை­யா­கும்.

"விமா­னத்­தைப்­போல வேக­மா­கச் செல்­லும் இந்த விரை­வு­ர­யில் இந்­திய ரயில்வே துறை­யின் வளர்ச்­சி­யின் அடை­யா­ள­மாக விளங்­கு­கிறது. இந்த ரயி­லைப் போலவே இந்­தி­யா­வும் இப்­போது வேக­மாக முன்­னேறி வரு­கிறது," என்று பிர­த­மர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார். கெம்­பே­கௌடா அனைத்­து­லக விமான நிலை­யத்­தின் இரண்­டாம் முனை­யத்­தை­யும் அவர் திறந்­து­வைத்­தார்.

இம்­மு­னை­யம் ரூ.5,000 கோடி செல­வில் 255,645 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் கட்­டப்­பட்­டுள்­ளது.