இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் உலகின் ஆக உயரமான வாக்குச்சாவடி

இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் உலகின் ஆக உயரமான வாக்குச்சாவடி

1 mins read
8747f68d-e24b-429e-88dd-897f99e8ee69
-

சிம்லா: இமா­ச்ச­லப் பிர­தேச மாநி­லத்­தில் 68 இடங்­க­ளைக் கொண்ட சட்­ட­ச­பைக்கு நேற்று தேர்­தல் வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. இங்கு 55 லட்­சத்து 92 ஆயி­ரத்து 828 வாக்­கா­ளர்­கள் உள்­ள­னர். நேற்­றுக் காலை எட்டு மணிக்­குத் தொடங்­கிய வாக்­குப்­ப­திவு மாலை 5.30 மணிக்கு முடி­வ­டைந்­தது.

வாக்குப் பதிவிற்காக விரி­வான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. நேற்­றுப் பிற்­ப­கல் மூன்று மணி நில­வ­ரப்­படி 55.65 விழுக்­காட்டு வாக்­கு­கள் பதி­வாகி உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். மொத்தம் 7,881 வாக்குச்சாவடிகளில் ஒன்று 15,526 அடி உயரத்தில் தஷிகங் மலையில் அமைக்கப்பட்டது. இது உலகின் ஆக உயரமான வாக்குச்சாவடி.

வாக்­கு­கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி குஜ­ராத் மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் வாக்­கு­க­ளு­டன் சேர்த்து எண்­ணப்­படும்.