உ.பி. மோசடிக்காரர்களிடம் இருந்து 3,912 ஏக்கர் நிலம் மீட்பு

உ.பி. மோசடிக்காரர்களிடம் இருந்து 3,912 ஏக்கர் நிலம் மீட்பு

1 mins read
350f97e5-37a8-4c02-bd47-0e452a36d54f
ஷாஜகான்பூரில் கங்கை ஆறு 15 கி.மீ. தொலைவும் ராம்கங்கை ஆறு 40 கி.மீ. தொலைவும் பாய்கின்றன. படம்: இந்திய ஊடகம் -

ஷாஜ­கான்­பூர்: உத்­த­ரப் பிர­தேச மாநிலத்­தில் கங்கை, ராம்­கங்கை ஆகிய ஆறு­க­ளின் பெய­ரில் பதி­வான 3,912 ஏக்­கர் நிலம், மோச­டிக் கும்­ப­லி­டம் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது. மீட்­கப்­பட்ட நிலத்­தின் மதிப்பு 300 கோடி ரூபாய்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள ஷாஜ­கான்­பூ­ரில் இவ்­விரு ஆறு­களும் பாய்­கின்­றன. ஜலா­லா­பாத், காலன் பகு­தி­களில், இந்த ஆறு­க­ளின் பெய­ரில் 1952ஆம் ஆண்டு நிலங்­கள் பதி­வா­கி­யி­ருப்­பதை மாவட்ட ஆட்­சி­யர் ரஷீத் அலி கண்­ட­றிந்­தார்.

விசா­ர­ணை­யில், 40 பேர் கொண்ட நில மோச­டிக் கும்­பல், இந்த இரண்டு ஆறு­க­ளுக்­குச் சொந்­த­மான 3,912 ஏக்­கர் பகு­தியை ஆக்­கி­ர­மித்து விவ­சா­யம் செய்­த­தும் இவற்­றின் பேரில் வங்­கி­களில் கடன் பெற்­றி­ருப்­ப­தும் தெரி­ய­வந்­தது. அர­சாங்க நட­வ­டிக்­கை­யில் இந்த ஆக்­கி­ர­மிப்­புப் பகு­தி­கள் மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் இருந்து மீட்­கப்­பட்­டு உள்­ளன.