புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய கல்வி அமைச்சின் பல்வேறு திட்டங்களை அதிபர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
"நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள பல மாணவர்கள் சிரமப்படுவதால்தான் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது," என்றார் அதிபர்.
"தாய்மொழியில் கல்வி கற்பதால் மாணவர்களிடம் ஆக்ககரமான சிந்தனை உருவாகும், பகுப்பாய்வுத் திறன் மேம்படும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும்," என்று அவர் கூறினார்.

