தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நரபலி கொடுக்க முயன்ற மாது கைது

1 mins read
0e39b93d-125e-4a48-9ebd-38b884b6ace2
-

புது­டெல்லி: இறந்த தந்­தையை மீண்­டும் உயிர்­பெ­றச் செய்­யும் முயற்­சி­யில் பிறந்து இரண்டு மாதமே ஆன பச்­சி­ளங்­கு­ழந்­தையை நர­பலி கொடுக்க முயன்ற மாது (படம்) கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கிழக்கு கைலாஷ் பகு­தி­யைச் சேர்ந்­த இவர் தந்­தை­மீது மிகுந்த பாசம் கொண்­ட­வர். குழந்தை ஒன்றை நர­பலி கொடுத்­தால் தந்தை உயிர்த்­தெ­ழு­வார் என யாரோ கூறிய ஆலோ­ச­னையைக் கேட்டு இரண்டு மாதக் குழந்­தையை இவர் கடத்­தி­னார். ஆனால் தனது திட்­டத்தை இவர் நடைமுறைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்பே காவல்­து­றை­யி­னர் அதை முறி­ய­டித்து குழந்­தையைப் பாது­காப்­பாக மீட்­டுள்­ள­னர்.