'இந்திய-அமெரிக்க வர்த்தகம் 600 பில்லியன் டாலரை எட்டும்'

'இந்திய-அமெரிக்க வர்த்தகம் 600 பில்லியன் டாலரை எட்டும்'

2 mins read
52043e6e-53ab-4c03-9458-3619a244695b
-

புது­டெல்லி: இந்­தியா-அமெ­ரிக்­கா­வுக்கு இடை­யி­லான வர்த்­த­கம் எதிர்­வ­ரும் 2030க்குள் 500 பில்­லி­யன் முதல் 600 பில்­லி­யன் டாலரை (ரூ.48.30 லட்­சம்­கோடி) எட்­டக்­கூடும் என மத்­திய வா்த்த­கத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்­பிக்­கைத் தெரி­வித்­துள்ளாா்.

டெல்­லி­யில் ஆங்­கில நாளி­தழ் சாா்பில் நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் அவா் பேசி­ய­போது, "இந்­திய-அமெ­ரிக்க உறவு தொடர்ந்து மேம்­பட்டு, வலு­வ­டைந்­து வரு­கிறது.

"இவ்­விரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான வா்த்த­கம் இப்­போ­தைய கால­கட்­டத்­தில் 175 பில்­லி­யன் டாலா்க­ளாக (ரூ.14.08 லட்­சம்­கோடி) உள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்­கான இந்­தி­யா­வின் சரக்குகள், சேவை­க­ளின் ஏற்­று­மதி மதிப்பு தலா இரண்டு ட்ரில்லியன் டாலரை (ரூ.161 லட்­சம் கோடி) எட்­டும் வேளை­யில், 2030க்­குள் இரு­நா­டு­களுக்கு இடை­யி­லான வா்த்த­கத்­தின் மதிப்பு 500 முதல் 600 பில்­லி­யன் டாலரை எட்­டும் என எதிர்பார்க்­கப்­ப­டு­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

அத்­து­டன், கல்வி நிறு­வ­னங்­களின் தலை­வா்­கள், மூத்த ஆசி­ரி­யா்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டிய அமைச்சர் பியூஸ் கோயல், "மாண­வா்­க­ளுக்கு கற்­பிக்­கப்­படும் கல்வி நாளைய தேவைகளைப் பூா்த்தி செய்­யும் வகை­யில் உள்­ளதா என்­ப­தை­யும் புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களையும் சொந்­த­மாகத் தொழில் தொடங்­கு­வதை ஊக்­கு­விக்கும் வகையிலும் உள்ளதா என்பதை சம்­பந்­தப்­பட்ட கல்வி நிறு­வ­னங்­கள் ஆராயவேண்­டும் என்­றும் அவா் அறி­வு­றுத்­தினாா்.

இத­னி­டையே, நாட்­டின் பொரு­ளியல் சூழ­லும் நிதித்­து­றை­யும் வலு­வாக இருப்­ப­தால் உல­கின் வேக­மாக வள­ரும் பொரு­ளியலாக இந்­தியா தொடா்ந்து நீடிக்­கும் என இந்­திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்­தி­காந்த தாஸ் நம்­பிக்­கைத் தெரி­வித்­துள்ளாா்.

டெல்லி கருத்­த­ரங்­கில் அவா் கூறு­கை­யில், "அனைத்­து­லக நிகழ்­வு­க­ளின் தாக்­கம் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தி­லும் எதி­ரொ­லித்து வரு­கிறது. அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களும் பொரு­ளியல் வீழ்ச்­சியை எதிா்கொண்டு வரு­கின்­றன. இந்­தி­யா­வில் பொரு­ளி­யல் சூழல் வலு­வாக உள்­ள­தால் நாட்­டின் நிதித்­து­றை­யும் நிலை­யாக உள்­ளது. அத­னால், நாட்­டின் வங்­கித் துறை­ வலு­வாக இயங்கி வரு­கிறது.

"தற்­போ­தைய சூழ­லில் பொரு­ளியல் வளா்ச்­சிக்­கான கணிப்­பு­கள் சிறந்த நிலையில் உள்­ளன. நாட்­டின் பொருளியல் வளா்ச்சி 7 விழுக்­கா­டாக இருக்­கும் என ரிசர்வ் வங்­கி­யும் 6.8 விழுக்­கா­டாக இருக்­கும் என அனைத்­து­லக நிதி­ய­மும் (ஐஎம்­எஃப்) கணித்­துள்­ளன. எனவே, இந்த நிதி­யாண்­டில் உல­கின் வேக­மாக வள­ரும் பொருளியலாக இந்­தியா நீடிக்­கும்," என்றார்.