தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூணாறில் நிலச்சரிவு; இரு இடத்தில் விபத்து

2 mins read
7168b2d2-c428-442f-9ae4-57e05c01693d
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் வெளுத்து வாங்­கிய கன­மழை கார­ண­மாக 11 மாவட்­டங்­க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப் பட்­டுள்­ளது. இந்த மழை மேலும் சில நாள்­க­ளுக்கு நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இடுக்கி, கோட்­ட­யம், பத்­த­னம் திட்டா, ஆலப்­புழா, எர்­ணா­கு­ளம், திருச்­சூர், பாலக்­காடு, மலப்­பு­ரம், கோழிக்­கோடு, வய­நாடு, கண்­ணூர் மாவட்­டங்­களில் தாழ்­வான பகுதி களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தொடர் மழை கார­ண­மாக மூணாறு பகு­தி­யில் இரண்டு இடங்­களில் திடீர் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது.

குண்­டலா அணை, மூணாறு 'எக்கோ பாயிண்ட்' அருகே இந்த நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­பட்­டன.

ஒரு நிலச்சரிவில் உயி­ரி­ழப்­பு எதுவும் இல்லை.

கோழிக்­கோடு மாவட்­டம், வட­கரை­யில் இருந்து 11 பேர் அடங்­கிய குழு­வி­னர் மூணா­றுக்­குச் சுற்­றுலா சென்ற நிலை­யில், குண்­டலா பகு­தி­யில் நிலச்­ச­ரி­வில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

வாக­னத்­தில் இருந்த 10 பேரும் உட­ன­டி­யாக கீழே இறங்­கிய நிலை­யில், ஓட்­டு­நர் ரூபேஷ், 40, வாக­னத்­தில் இருந்த கைபே­சியை எடுக்­கச் சென்­றார். அப்­போது, திடீ ரென ஏற்­பட்ட காட்­டாற்று வெள்­ளத்­தில் வாக­னம் அடித்­துச் செல்­லப்­பட்­ட­தில் ரூபேஷ் மாய­மா­னார்.

சனிக்­கி­ழமை இரவு விபத்து நிகழ்ந்­த­தைத் தொடர்ந்து, அவ­ரைத் தேடும் பணி­யில் மூணாறு தீய­ணைப்­புத் துறை­யி­னர், காவ­லர்­கள், பொது­மக்­கள் ஈடு­பட்­ட­னர்.

நேற்று காலை­மு­தல் இந்த மீட்­புப் பணி மீண்­டும் தொடர்ந்­தது. மாய­மான ரூபேஷ் பற்­றிய விவ­ரம் தெரி­ய­வில்லை. அவ­ரைத் தொடர்ந்து தேடி வருகின்­ற­னர்.

"வட­கரையில் இருந்து சுற்­றுலா சென்ற மூன்று வாக­னங்­களில் இந்த வேனும் ஒன்­றா­கும். மலைச்­ ச­ரி­வில் 700 மீட்­ட­ருக்கு கீழே அந்த வேன் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அது காட்டு யானை­கள் அதி­கம் நட­மா­டும் பகு­தி," என்­று காவல்துறை­யினா் கூறினர்.