லாலு மகள் ரோஹினி: சிறுநீரகம் என்பது சிறிய தசைதான், தந்தைக்காக எதையும் ெசய்வேன்

1 mins read
ab8e69fd-e935-4eb8-b66a-625df26c3afc
டெல்லியில் உள்ள தன் மூத்த மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியுள்ள லாலுவுடன் சிறுநீரகம் வழங்க உள்ள மகள் ரோஹினி. படம்: ஊடகம் -

பாட்னா: பீகார் முன்­னாள் முதல் வரும் ராஷ்ட்­ரிய ஜனதா தளத்­தின் தலை­வ­ரு­மான லாலு பிர­சாத் யாதவ், 74, பல­வித உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளால் அவ­திப்­பட்டு வரும் நிலை­யில், அவ­ருக்கு சிறு­நீ­ர­கம் தானம் செய்ய முன்­வந்­துள்­ளார் அவ­ரது மகள் ரோஹினி ஆச்­சார்யா. இவர், சிங்­கப்­பூ­ரில் வசித்து வரு­கி­றார்.

"சிறு­நீ­ர­கம் என்­பது சிறிய தசை­தான். என் தந்­தைக்­காக நான் எதை­யும் செய்­வேன். உங்­கள் அனைவருக்­கா­க­வும் குரல் கொடுப்­ ப­தற்­காக அப்பா மீண்­டும் உடல்­நிலை சரி­யாகி வர­வேண்­டும் என்று பிரார்த்­தி­யுங்­கள்," என ரோஹினி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

தன் பெற்­றோரை கட­வு­ளுக்கு நிக­ரா­கக் கரு­து­வ­தா­க­வும் மகள் என்ற கட­மை­யைச் செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்­ததை அதிர்ஷ்ட மாகக் கரு­து­வ­தா­க­வும் பெருமை யுடன் கூறி­யுள்­ளார்.

ஊழல் வழக்­கு­கள் தொடர்­பில் சிறை­யில் அடைக்­கப்பட்ட லாலு, நீதி­மன்ற சிறப்பு அனுமதி­யு­டன் சிங்­கப்­பூ­ரில் சிகிச்சை பெற்று அண்மையில் நாடு திரும்­பி­னார்.