சூடுபிடிக்கிறது குஜராத்தின் மும்முனை தேர்தல் களம்

சூடுபிடிக்கிறது குஜராத்தின் மும்முனை தேர்தல் களம்

2 mins read
6015dcb1-7deb-45da-a757-0f3eb85145ec
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் டிசம்­பர் 1, 5ஆம் தேதி­யில் இரு கட்­டங்­க­ளாக 182 இடங்­க­ளுக்­கான சட்­டப்­பே­ர­வைத் தோ்தல் நடை­பெற உள்­ளதை அடுத்து, மும்­மு­னைப் போட்டி நில­வும் தேர்­தல் களம் இப்­போதே சூடு­பி­டிக்­கத் தொடங்கி உள்­ளது.

குஜ­ராத்­தில் 27 ஆண்­டு­க­ளாக பாஜக ஆட்­சி­யில் இருந்து வரும் சூழ­லில், இத்­தேர்­த­லில் தாங்­கள் ஆட்சி அமைத்­தால் பெண்­க­ளுக்கு இல­வ­சக் கல்வி வழங்­கப்­படும் என காங்­கி­ரஸ் அறி­வித்­துள்­ளது.

அக­ம­தா­பாத்­தில் குஜ­ராத் மாநி­லத்­துக்­கான தேர்­தல் அறிக்­கையை ராஜஸ்­தான் முதல்­வ­ரும் காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரு­மான அசோக் கெலாட் வெளி­யிட்­டார்.

அதில், எல்­கேஜி முதல் முது­நி­லைப் படிப்பு வரை மக­ளி­ருக்கு இல­வ­சக் கல்வி; வேலை­யற்ற இளை­ஞர்­க­ளுக்கு மாதம்­தோ­றும் ரூ.3,000 உதவி நிதி; ரூ.500க்கு சமை­யல் எரி­வாயு உருளை; மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், கண­வரை இழந் தோர், மூத்த குடி­மக்­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.2,000 ஓய்­வூ­தி­யம் வழங்­கப்­படும் என காங்­கி­ரஸ் தேர்­தல் வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளது.

அதே­நே­ரத்­தில், காங்­கி­ர­சில் இருந்து வில­கி­ய­வர்­கள் பல­ருக்­கும் பாஜக இம்­முறை தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு வழங்­கி­உள்­ளது. ஆனால், ஏற்­கெ­னவே பாஜ­க­வில் இருந்து வரும் சில­ருக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­டா­த­தால் அதி­ருப்தி கார­ண­மாக சுயேச்­சை­யா­கப் போட்­டி­யிட மனுத்­தாக்­கல் செய்ய முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

ஹா்ஷத் வாசவா, மது ஸ்ரீவத்­சவ், தினேஷ் படேல், சதீஷ் படேல், அர்­விந்த் லதானி உள்­ளிட்­டோர் சுயேச்­சை­யா­கப் போட்­டி­யி­டா­மல் இருக்க அவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் பாஜக தலைமை கள­மி­றங்கி உள்­ளது.

ஆம் ஆத்மி கட்­சி­யும் தன் பங்­குக்கு குஜ­ராத் மக்­க­ளுக்கு தேர்­தல் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி­யுள்­ளது.

இத­னி­டையே, ஜாம்­ந­கர் தொகு­தி­யில் பாஜக சார்­பில் கள­மி­றங்­கும் தனது மனை­விக்கு வாக்­க­ளிக்­கு­மாறு அத்­தொ­குதி மக்­க­ளி­டம் பிர­பல கிரிக்­கெட் வீரர் ரவீந்­திர ஜடேஜா ஆத­ரவு கோரி­யுள்­ளார்.