மும்பை விமான நிலையத்தில் 61 கிலோ தங்கக்கட்டி பிடிபட்டது

2 mins read
2d214e09-8b49-45ea-b6ef-6a0b0f08253c
மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் ஆக அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள 61 கிலோ தங்கக்கட்டிகள். படம்: டுவிட்டர் -

மும்பை: மஹா­ராஷ்­டிரா மாநி­லம், மும்பை சத்­ர­பதி சிவாஜி மகா­ராஜ் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் ₹32 கோடி மதிப்­புள்ள 61 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இது­தொ­டர்­பாக, இரு பெண்­கள் உட்­பட ஏழு பேர் கைது செய்­யப்பட்­டுள்­ள­னர்.

மும்பை சுங்­கத்­துறை வர­லாற்­றில் இது­வரை இல்­லாத அள­வுக்கு ஒரே­நா­ளில் ஆக அதிகமாக கடத்­தல் தங்­கம் கைப்­பற்­றப்பட்­டுள்­ள­தா­க­வும் தகவல்கள் கூறுகின்றன.

இது­கு­றித்து சுங்­கத்துறை அதி காரி­கள் கூறு­கை­யில், "ஆப்பிரிக்க நாடான டான்­சா­னி­யா­வில் இருந்து வந்த நான்கு இந்­தியர்கள் இந்­தக் கடத்­த­லுக்கு என்றே தயாரிக்­கப்­பட்­டி­ருந்த 'பெல்ட்'டில் தங்­கத்தை மறைத்து கடத்தி வந்­துள்­ள­னர்.

"டோஹாவில் இணைப்பு விமா னத்தில் ஏற வந்தபோது சூடானைச் சேர்ந்த ஒருவர் பெல்ட்டை கொடுத்த தாக விசாரணையில் கூறினர்.

"நால்வரிடம் இருந்தும் ₹28.17 கோடி மதிப்­புள்ள 53 கிலோ தங்கக் கட்­டி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

"மற்­றொரு சம்­ப­வத்­தில், துபா­யில் இருந்து வந்த மூவரிடம் நடத்­தப்பட்ட சோதனையில் ₹3.88 கோடி மதிப்­புள்ள 8 கிலோ தங்­கத்தை மெழு­கு­போல் மாற்றி மறைத்து கடத்திவந்­தது தெரியவந்தது.

"இதுதொடர்­பாக இரு பெண்­கள் உட்­பட மூவர் கைதாகினர். 60 வய­துப் பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்­பட்­டி­ருந்­தார்," என்றனர் அதிகாரிகள்.

இதனிடையே, "உங்கள் விழிப் புணர்வைப் பாராட்டுகிறேன். தக்க நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை மூலம் அதிர்ச்சியூட்டும் அளவில் தங்கம் சிக்கியுள்ளது," என சுங்கத் துறை அதிகாரிகளை மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட் டரில் பாராட்டி உள்ளார்.