இந்திய நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.68.23 லட்சம் கோடி தேவை

இந்திய நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.68.23 லட்சம் கோடி தேவை

1 mins read
ebc4e6ae-39c4-4d02-8e56-e85ddcbbe45a
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் நகர்ப்­புற வளர்ச்­சிக்கு அடுத்த 15 ஆண்­டு­களில் சுமார் 68.23 லட்­சம் கோடி ரூபாய் தேவைப்­படும் என உலக வங்கி தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், இந்­தி­யா­வில் நகர்ப்­புற மக்­கள் தொகை வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் மக்­கள் தொகைக்கு ஏற்ப உள்கட்­ட­மைப்பு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு இத்­தொகை தேவைப்­படும் என்­றும் அந்த வங்கி குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­திய நகர்ப்­புற உள்­கட்­ட­மைப்பு வளர்ச்­சிக்கு ஆண்­டு­தோ­றும் ரூ.4.46 லட்­சம் கோடி தேவைப்­படும் நிலை­யில், தற்­போது அதற்­காக செல­வி­டப்­படும் தொகை வெறும் ரூ.1.43 லட்­சம் கோடி மட்­டுமே என உலக வங்கி அறிக்கை தெரி­விக்­கிறது.

2036ஆம் ஆண்டு இந்­திய குடி­மக்­களில் சுமார் 60 கோடி பேர் நாட்­டின் நகர்ப்­பு­றங்­களில் வசிப்­பர் என மற்­றோர் ஆய்வு தெரி­விக்­கிறது. அச்­ச­ம­யம் இந்த எண்ணிக்­கை­யா­னது நாட்­டின் மொத்த மக்­கள்­தொ­கை­யில் அறு­பது விழுக்­கா­டாக இருக்­கும்.

"எனவே அச்­ச­ம­யம் நகர்ப்­புற உள்­கட்­ட­மைப்­புக்கு கூடு­தல் அழுத்­தம் ஏற்­படும்.

"தூய்­மை­யான, அதிக குடி­நீர் தேவை, நம்­ப­க­மான மின்­சா­ரம், பாது­காப்­பான சாலைப் போக்­கு­வ­ரத்து ஆகி­யவை இல்­லை­யெ­னில் நகர்ப்­புற வளர்ச்­சி­யில் பாதிப்­பும் தாம­த­மும் ஏற்­படும்," என்­று உலக வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.