பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா. 55 வயதான இவர் கடந்த 12ஆம் தேதி விறகு வெட்டி வர தன் வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
தினமும் காலை ஆறு மணிக்குச் சென்று பத்து மணிக்கு விறகுகளுடன் வீடு திரும்புவது அவரது வழக்கம்.
இந்நிலையில் 12ஆம் தேதி நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தார் கவலை அடைந்து அண்டை வீட்டாரின் உதவியோடு அவரைத் தேடினர். எங்கும் அவரைக் காண முடியாமல், அனைவரும் தவித்தபோது, சேகரப்பாவின் செல்லப்பிராணியான டாமி என்ற நாய் திடீரென குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஓடியது. அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது சேகரப்பா மயங்கிக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.
அதிக வெப்பம் காரணமாக அவர் மயக்கமடைந்தது தெரியவந்தது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார். டாமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

