காதலியை கூறுபோட்ட அஃப்தாபுக்கு மேலும் ஐந்து நாள் காவல் நீட்டிப்பு

காதலியை கூறுபோட்ட அஃப்தாபுக்கு மேலும் ஐந்து நாள் காவல் நீட்டிப்பு

1 mins read
cd7c6177-f1b5-4b81-8e99-ae1bb2a7cb22
அஃப்தாப், (இடம்) காதலி ஷிரத்தாவைக் கொன்ற பிறகு மது, மாது என உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: காத­லி­யைக் கொன்று 35 துண்­டு­க­ளா­கக் கூறு­போட்டு ஒவ்­வொன்­றாக வீசிய அஃ­தாப் பூனாவாலாவுக்கு மேலும் ஐந்து நாள்களுக்கு காவல் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

முத­லில் பத்து நாள்களுக்கு காவலை நீட்­டிக்க வேண்­டும் என்று காவல்­து­றை­யி­னர் கேட்­டுக் கொண் ­ட­னர். தடுப்­புக் காவ­லில் அஃ­தாப்பை உத்­த­ர­காண்ட், இமாச்­ச­ல­பி­ர­தே­சம் போன்ற இடங்­க­ளுக்கு அழைத்­துச் சென்று விசா­ரிக்க டெல்லி காவல்­துறை முடிவு செய்­துள்­ளது.

இதற்­கி­டையே கொல்­லப்­பட்ட இளம்­பெண் ஷிரத்­தா­வின் தந்­தை­யி­டம் மர­ப­ணுக்­கூறு மாதி­ரியை காவல்துறை­யி­னர் பெற்­றுள்­ள­னர்.

அஃ­தாப்பும் ஷிரத்­தா­வும் 28, பெற்­றோர் எதிர்ப்­பை­யும் மீறி டெல்­லி­யில் ஒன்­றாக வசித்து வந்­த­னர். ஷிரத்தா, தன்­னைத் திரு ­ம­ணம் செய்­து­கொள்ள வற்­பு­றுத்­தி­ய­தால் அவரை கொன்று 35 துண்­டு­க­ளாக வெட்டி ஒவ்­வொன்­றாக டெல்லி முழு­வ­தும் குப்பை கூளங்­களில் அஃ­தாப் வீசி வந்­த­தா­கக் கூறப் ­ப­டு­கிறது. அப்­படி ஒரு நாள் வீசும்­போது காவல்­து­றை­யி­டம் அஃ­தாப் சிக்கிக் கொண்­டார்.

சமை­யல் அறை­யில் ரத்­தக்­கறை மாதி­ரி­கள் சேக­ரித்து ஆய்­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. ஷிரத்­தாவை வெட்ட அமீன் பயன்­ப­டுத்­திய ஆயு­தம் இன்­னும் சிக்­க­வில்லை. அப் ­ப­கு­தி­யில் இருந்த கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் நீண்­ட­நாள் காட்­சி­கள் பதி­வா­க­வில்லை. இத­னால் இந்த வழக்கு காவல்துறைக்கு சவா­லாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, சேக­ரிக்­கப்­பட்ட உறுப்­பு­கள், ஷிரத்­தா­வு­டை­யதா என்­பதை ஆய்வு செய்­வ­தற்­காக, அவ­ரு­டைய தந்­தை­யி­டம் இருந்து 'டிஎன்ஏ' மாதி­ரி­களை காவல்­து­றை­யி­னர் பெற்­றுள்­ள­னர்.