ராகுலுடன் காந்தியின் கொள்ளுப்பேரன் நடை

1 mins read
78e9399e-6d93-42e9-b159-e53a8c07c1d2
ராகுல் காந்தி நடை பயணத்தில் பங்கேற்ற காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி. படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரு கிறார்.

இந்த நடைப்பயணம் தற்போது மராட்டிய மாநிலத்தை அடைந்து உள்ளது.

அகோலா மாவட்டத்தின் பாலா பூர் பகுதியில் இருந்து வியாழன் காலை தொடங்கிய நடைபயணம் ஷோகன் நகரை அடைந்தது.

அப்போது மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்று கூடவே நடந்து வந்தார்.

இதற்­கி­டையே நடை­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள ராகுல் காந்தி வெடி­குண்டு வைத்து கொல்­லப்­ ப­டு­வார் என மத்­தி­யப்­பி­ர­தேச மாநி­லம் இந்­தூ­ரில் உள்ள ஒரு இனிப்பு கடை வாச­லில் கடி­தம் ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல் ­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக அடை­யா­ளம் தெரி­யாத நபர் மீதும் வழக்­குப் ­பதிவு செய்த காவல்­துறை, இது புர­ளி­யாக இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கிறது. மிரட்­டல் கடி­தம் வந்­த­தை­ய­டுத்து ராகுல்­காந்­திக்கு பலத்த பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது.