இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் நிறுவனம் தயாரித்த ஏவுகணையை (படம்) நேற்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ஏவுகணையைத் தயாரித்து உள்ளது. இது, இந்தியாவில் தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ஏவுகணையாகும். இது, 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. படம்: இபிஏ

