திருவனந்தபுரம்: ஓடும் காருக்குள் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாணவிக்கு 19 வயது ஆகிறது என்றும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேர் கைதாகி உள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட இளம் பெண் காசர்கோட்டைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரத்துறையில் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
"அண்மையில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனது தோழி ஒருவருடன் சேர்ந்து நண்பர்கள் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் மது விருந்தில் அந்தப் பெண் பங்கேற்றுள்ளார். அப்போது மது போதையில் சிலர் இருவரையும் காருக்குள் வைத்து சீரழித்துள்ளனர்.
அந்த இளம்பெண்ணை நெடுஞ்சாலை ஒன்றில் இறக்கி விட்ட பின்னர் அந்த நண்பர்கள் குழு தப்பியோடியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ஒரு பெண் உட்பட நால்வர் கைதாகினர்.
நாடு முழுவதும் இத்தகைய வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது.
இதையடுத்து இளம்பெண்ணை சீரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

