பயங்கரவாதச் செயல்

பயங்கரவாதச் செயல்

2 mins read
1a0f9c51-192f-4bca-b379-fbdc4612344b
சம்பவ இடத்தில் தடயவியல் சோதனை. படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: மங்­க­ளூ­ரு­வில் ஆட்டோ ஒன்­றில் நிகழ்ந்த வெடிப்­புச் சம்­ப­வம் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­ல் என்று கர்­நா­டக மாநில தலை­மைக் காவல்­ அதி­காரி(டிஜிபி) உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மங்­க­ளூ­ரு­வில் உள்ள நாகுரி என்ற பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் மாலை ஆட்டோ ஒன்­றில் மர்­மப் பொருள் வெடித்­த­தில் ஆட்டோ வாக­னம் தீப்­பி­டித்து எரிந்­தது. இந்த விபத்­தில் ஆட்டோ ஓட்டுநரும் அதி­ லி­ருந்த ஒரு பய­ணி­யும் பலத்த காயம் அடைந்­த­னர்.

இது பற்றி தக­வல் அறிந்­த­தும் சம்­பவ இடத்­திற்கு விரைந்த காவல் துறை­யி­னர், தட­ய­வி­யல் நிபு­ணர்­களை வர­வ­ழைத்து சோதனை நடத்­தி­னர்.

அப்­போது ஆட்­டோ­வில் இருந்து எரிந்த நிலை­யில் குக்­க­ரும் பேட்­ட­ரி­களும் கைப்­பற்­றப்­பட்­டன. இத­னால் சந்­தே­கம் அடைந்த காவல்­துறை இது பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தலோ என்ற நோக்­கில் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று கர்­நா­டக மாநில டிஜிபி பிரவீன் சூட் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் நேற்றுக் காலை டுவிட்டர் பதிவில், "ஆட் டோவில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் விபத்து அல்ல என் பதும் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதும் உறுதி செய்யப்பட் டுள்ளது. கடுமை யான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தாக்குதலுக்குத் தயாரானதுபோலத் தெரிகிறது.

"மத்­திய அர­சின் பல்வேறு விசா­ரணை ஆணை­யங்­க­ளு­டன் கர்­நா­டக காவல்­துறை தீவிர விசா­ரணை நடத்தி வரு­கிறது," என்­றார் அவர்.

கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திராவும் இது பயங்கரவாதம் தொடர்பான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், இந்த ஆட்டோ வாக­னம் துர்கா பர­மேஸ்­வரி என்ற பெய­ரில் பதிவு செய்­யப்­பட்­டது தெரியவந்துள்ளது.

அதே­போல், இதில் பய­ணம் செய்த நப­ரி­டம் பிரேம் ராஜ் என்ற பெய­ரில் அடை­யாள அட்டை இருந்­துள்­ளது. இருப்­பி­னும் இந்த அடை­யாள அட்டை உண்­மை­தானா என்ற கோணத்­தில் காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றன. அவ­ருக்கு 50 விழுக்­காடு காயங்­கள் ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார். சிகிச்­சை­யில் உள்ள அவ­ரா­லும் ஓட்­டு­ந­ரா­லும் தற்­போது பேச முடி­ய­வில்லை. அவர்­கள் தேறிய பின்­னரே விசா­ரணை நடத்தி வாக்­கு­மூ­லம் பெற­மு­டி­யும் என்று காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

காவல்துறை: மங்களூரு வெடிப்புச் சம்பவம் விபத்து அல்ல