வாக்களிப்பில் குஜராத் மக்கள் சாதனை புரியவேண்டும்: மோடி

வாக்களிப்பில் குஜராத் மக்கள் சாதனை புரியவேண்டும்: மோடி

2 mins read
6d374e54-d404-475c-8925-0addab008496
-

சோம்நாத்: குஜ­ராத் மாநில சட்­டப் பேர­வைக்கு டிசம்­பர் 1, மற்­றும் டிசம்­பர் 5 தேதி­களில் இரு கட்­டங்­க­ளா­கத் தேர்­தல் நடக்க உள்­ளது. இதற்­கான பிர­சா­ரம் 182 தொகு­தி­க­ளி­லும் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது.

ஆட்­சி­யைத் தக்­க­வைக்க பாஜக தலை­வர்­கள் சூறா­வ­ளிப் பிர­சா­ரம் மேற்­கொண்டு வரு­கி­றார்­கள். அதே­நே­ரம், பல்­லாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு ஆட்­சி­யைப் பிடிக்­கும் வேட்­கை­யில் காங்­கி­ரசும் தீவி­ரம் காட்டி வரு­கிறது. ஆம் ஆத்மி 3வது அணி­யாக களத்­தில் குதித்­துள்­ளது.

தனது சொந்த மாநி­ல­மான குஜ­ராத்­தில் பிர­த­மர் மோடி இம்­மா­தம் 6ஆம் தேதி பிர­சா­ரம் செய்து ஆத­ரவு திரட்­டி­னார். வல்­சாத் மாவட்­டம் கபர்­தா­வில் நடந்த பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார்.

அவர் தமது இரண்­டா­வது கட்­டப் பிர­சா­ரத்தை நேற்று தொடங்­கி­னார். இதற்­காக மோடி மூன்று நாள் பய­ண­மாக நேற்று முன்­தி­னம் இரவு குஜ­ராத் சென்­றார். வல்­சாத் மாவட்­டம் ஜூவா சரா­பத்­தில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார்.

புகழ்­பெற்ற சோம்­நாத் கோவி­லில் நேற்­றுக் காலை நடை­பெற்ற பூசை­யில் கலந்­து­கொண்டு பிரார்த்­தனை செய்த மோடி இரண்­டா­வது நாள் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டார். நேற்று மட்­டும் நான்கு பிர­சா­ரப் பொதுக் கூட்­டங்­களில் பங்­கேற்று பாஜக வேட்­பா­ளர்­

க­ளுக்கு ஆத­ரவு திரட்­டி­னார்.

சோம்­நாத் மாவட்­டம் வீராவல் என்­னும் இடத்­தில் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்­தில் மோடி பேசு­கை­யில், "வாக்­குப்­ப­திவு நாளில் மக்­கள் அதிக அள­வில் வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று வாக்­க­ளிக்க வேண்­டும். முந்­தைய வாக்­குப்­ப­திவு சாத­னையை குஜ­ராத் மக்­கள் முறி­ய­டிக்க வேண்­டும்.

"ஒவ்­வொரு வாக்­குச் சாவ­டி­யி­லும் பாஜக வெற்­றி­பெ­று­வதை உறுதி செய்ய வேண்­டும். மக்­க­ளா­கிய நீங்­கள் அதை எனக்­காக செய்­வீர்­களா?," என்று கேள்வி எழுப்பி பிர­சாரம் செய்­தார் மோடி. தொடர்ந்து ராஜ்­காட் மாவட்­டம் தோராஜி, அம்­ரேலி, போடட் பகு­தி­களில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டங்­க­ளி­லும் பேசி­னார்.

இரு கட்ட வாக்குப் பதிவிலும் அளிக்கப்படும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும். பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மோடி கூறிவருகிறார்.