துப்பாக்கிச்சூடு: 4 பேர் மரணம்

துப்பாக்கிச்சூடு: 4 பேர் மரணம்

1 mins read
1106cb6a-327b-4553-8a32-dbb9f46f4e20
-

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். பாக்மரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நிலக்கரிக் கிடங்கிற்குள் புகுந்த கும்பல் ஒன்று நிலக்கரி திருடி யது. அதனைக் கண்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையி னர், திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களை திருடர்கள் தாக்கத் தொடங்கி னர். இருதரப்பினருக்கும் இடை யில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டை யில் 4 திருடர்கள் மாண்டனர். இருவர் காயமுற்றனர்.