இந்தியா செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி. 'ஏர் சுவிதா' படிவங்களை நிரப்பி அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இனி அவர்களுக்கு இல்லை.
இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) முதல் இந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது. தங்களது சுகாதார நிலையையும் அண்மையில் மேற்கொண்ட பயண விவரங்களையும் 'ஏர் சுவிதா' படிவத்தில் இதுவரை பயணிகள் நிரப்பி வந்தனர்.
கொவிட்-19 தொற்று நிலவரம் மேம்பட்டுள்ளதாலும் இந்தியாவிலும் உலகளவிலும் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும் வழிகாட்டி நெறிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

