பெங்களூரு: மங்களூரு அருகே குக்கர் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பில் கைதான முகமது ஷாரிக், 24, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்துவதற்கு முன்னதாக ஷாரிக் தனது நண்பர்கள் யாசின், மாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஷிமோகாவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குண்டை வெடிக்க வைத்து சோதனை செய்து பார்த்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் குக்கர் வெடிகுண்டுடன் பல காணொளிகளை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே கடந்த 19ஆம் தேதியன்று ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதனை வெடிக்கச் செய்த ஷாரிக், மருத்துவமனையில் 45 விழுக்காடு காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், அவரிடம் நேற்று விசாரணையைத் தொடங்கி இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் மங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிட் காய்ன்' மூலம் ஷாரிக் பண உதவி பெற்று வந்துள்ளார். வெளி நாடுகளில் இருந்து அவருக்கு கிடைத்துள்ள உதவிகள் குறித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
"ஐ.எஸ். போன்ற அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளரான ஷாரிக், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக இயங்கி வந்துள்ளார்.
"பொறியியல் பட்டதாரியான ஷாரிக், ஷிமோகாவில் மிகவும் அமைதியான முறையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ள நிலை யில், நாசவேலையில் ஈடுபட்டுள்ளது வெளிசத்துக்கு வந்துள்ளது," எனத் தெரிவித்தார்.

