திருவனந்தபுரம்: உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை எந்த ஒரு தொந்தரவும் இன்றி, பெரிய திரையில் ரசித்து மகிழ்வதற்காக ரூ.23 லட்சம் பணம் கொடுத்து ஒரு வீட்டை 17 ரசிகர்கள் ஒன்றிணைந்து வாங்கியுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் காற்பந்துப் போட்டி மிகவும் பிரபலம்.
இந்நிலையில், மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய வீரர் களின் 'கட் அவுட்'களையும் கேரளாவில் வைத்து அசத்தியுள்ளனர்.
அத்துடன், கொச்சியில் உள்ள முண்டக்காமுகல் கிராமத்தில் வசிக்கும் 17 ரசிகர்கள் சேர்ந்து ரூ.23 லட்சத்தில் வீடு வாங்கியுள்ளனர்.
அந்த வீட்டிற்கு அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் அணிகளின் நிறங்களில் சாயமும் அடித்துள்ளனர்.
அனைவரும் ஒன்றாகப் போட்டியைக் காணும் வகையில் வீட்டில் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிப் பெட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.
தங்களுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறையினரும் இவ்வீட்டில் காற்பந்துப் போட்டிகளைப் பார்க்கலாம் என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
"2022 காற்பந்துப் போட்டியை மனதுக்கு நெருக்கமானதாகவும் மறக்கமுடியாத வகையிலும் மாற்றவே இம்முடிவை எடுத்தோம்," என்கின்றனர் ரசிகர்கள்.

