இந்திய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 'வியத்தகு இந்தியா' பிரசாரம் மீண்டும் துவக்கம்

இந்திய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 'வியத்தகு இந்தியா' பிரசாரம் மீண்டும் துவக்கம்

1 mins read
eb0d4705-bd6c-4ffc-b3cf-acc2e518e888
-

புது­டெல்லி: இந்­திய சுற்­று­லாத்­துறையை ஊக்­கு­விக்­கும் வித­மாக 'வியத்­தகு இந்­தியா' என்ற உலக அள­வி­லான சுற்­றுலா பிர­சா­ரத்தை மீண்­டும் தொடங்கி உள்­ள­தாக மத்­திய சுற்­று­லாத் துறை செய­லர் அர்­விந்த் சிங் தெரி­வித்­துள்­ளார்.

சுற்­று­லாத் துறையை மேம்­ப­டுத்த கடந்த இரு­பது ஆண்­டு­க­ளா­கப் பல்­வேறு முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் கொரோனா தொற்­றுப் பாதிப்பு கார­ண­மாக சுற்­றுலாத் துறை முழு­வ­து­மாக முடங்­கிப்போனது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போது கொரோனா நெருக்­கடி குறைந்­துள்ள நிலை­யில், இந்­திய சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­விக்க புதுத்­திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

"ஜி20 அமைப்­புக்கு இந்­தியா தலை­மைப் பொறுப்பை ஏற்­றுள்­ளது சுற்­று­லாத் துறை­யின் மறு­ம­லர்ச்சிக்கு சாத­க­மாக இருக்­கும். மேலும், கொரோனா நெருக்­க­டிக்கு முன்பு காணப்­பட்ட விறு­வி­றுப்­பைக் கொண்டு வரும் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"கடந்த 2019ஆம் ஆண்­டில் வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணிகளின் வருகை 1.7 கோடி­யாக இருந்­தது.

"எதிர்­வ­ரும் 2023ல் ஜி20 மாநாடு இந்­தி­யா­வில் நடை­பெற உள்­ள­தால் வெளி­நா­டு­களில் இருந்து இந்­தியா­வுக்கு வரு­வோர் எண்­ணிக்கை மீண்­டும் பழையை நிலையை எட்டும் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்வோம்," என சுற்றுலாத்­துறை செய­லா­ளர் அர்­விந்த் சிங் நம்பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வது வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு கலா­சார, ஆன்­மிக ரீதி­யில் புத்­து­ணர்வு அளிக்­கும் என்றார் அவர்.