பெங்களூரு: தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த ரவுடிகளின் வீடுகளில் பெங்களூர் காவல்துறை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து 28 பேரை விசா ரணைக்காக தடுத்து வைத்திருப்ப தாகவும் மற்ற அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு மாநகராட்சிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அத்தேர்தலில் போட்டியிட பல ரவுடிகள் திட்டமிட்டுள்ளதாகவும் குறுகிய கால அவகாசத்துக்குள் தங்களை அரசியல் பிரமுகர்களாக வளர்த்துக்கொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே 86 ரவுடிகளின் வீடுகளில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சோதனையின்போது பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட் டன. பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த ரவுடிகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றனர்.
அடுத்த சில தினங்களுக்கு இந்த சோதனை, கைது நடவடிக்கை நீடிக்கும் என பெங்களூரு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

