தேர்தல் ஆணையர் நியமனம்: உச்ச நீதிமன்றம் கேள்வி

2 mins read
02951a20-5fd9-4bfd-9d53-6455d816cc98
-

புது­டெல்லி: மத்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­வ­ராக அருண் கோயல் நிய­மிக்­கப்­பட்­டது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு, உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்பியுள்­ளது.

அவ­சர அவ­ச­ர­மாக தேர்­தல் ஆணை­யர் நிய­மிக்­கப்­பட்­டது ஏன் என்று அந்­நீ­தி­மன்­றம் கேட்­டுள்­ளது.

மத்­திய அரசு பணி­யில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற மறு­நாளே அருண் கோயல் இந்­திய தேர்­தல் ஆணை­ய­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இது­கு­றித்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் கேள்­வி­கள் எழுப்­பி­னர். இதை­ய­டுத்து உச்ச நீதி­மன்­றத்­தில் சிலர் வழக்­கும் தொடுத்­துள்­ள­னர்.

இந்த மனுவை நீதி­பதி கேஎம் ஜோசப் தலை­மை­யி­லான ஐந்து நீதி­ப­தி­க­ளைக் கொண்ட அமர்வு விசா­ரித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, மத்­திய அர­சுப் பணி­யில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒரு­வரை எவ்­வாறு தேர்­தல் ஆணை­ய­ராக நிய­மிக்க இய­லும் என்­பது குறித்து மத்­திய அரசு விளக்­கம் அளிக்க நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

மேலும், இதற்­கான நிய­மன நடை­மு­றை­கள் எவ்­வாறு பின்­பற்­றப்­பட்­டன என்று கேட்­டுள்ள உச்ச நீதி­மன்­றம், நிய­மன ஆணை உள்­ளிட்­ட­வற்றை அறிக்­கை­யாக தாக்­கல் செய்­யும்­ப­டி­யும் மத்­திய அரசுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும் அருண் கோயல் அவசர அவ­ச­ர­மாக மத்­திய அர­சால் தேர்­தல் ஆணை­யர் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த நீதி­பதி­கள், குறு­கிய காலத்­தில் இந்த நிய­ம­னத்தை மேற்­கொள்ள பின்­னணிக் கார­ணம் என்ன என்­றும் கேட்­டுள்­ளது.

"தேர்­தல் ஆணை­யத்­தின் சுதந்­தி­ரம் குறித்து மத்­திய அரசு பேசு­வதெல்­லாம் வெறும் வாய்­வார்த்­தை­தான். தலை­மைத் தேர்­தல் ஆணை­யர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­கள் குறு­கிய காலத்­தில் ஓய்வு பெறு­வ­தைக் கருத்­தில் கொண்டே மத்­திய அரசு நிய­ம­னங்­களை மேற்­கொள்­கிறது," என்று நீதி­பதி ஜோசப் சாடி­னார்.

தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­வர் அர­சி­யல் சார்­பற்­ற­வ­ராக இருக்க வேண்­டும் என்­றும் உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சமூக ஊட­கங்­களில் பல்­வேறு விவா­தங்்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.