'500 கிலோ கஞ்சாவை தின்றுத் தீர்த்த எலிகள்'

'500 கிலோ கஞ்சாவை தின்றுத் தீர்த்த எலிகள்'

1 mins read
0bb8d087-9ea2-42a4-a845-350f070c827d
-

ஆக்ரா: காவல் நிலை­யத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த 500 கிலோ கஞ்­சாவை எலி­கள் சாப்­பிட்­டு­விட்­ட­தாக ஆக்ரா காவல்­துறை யினர் நீதி­­மன்­றத்­தில் தெரி­வித்­தனர்.

இத­னால் கடும் அதிர்ச்சி அடைந்த நீதி­ப­தி­கள், உண்மை யிலேயே ரூ.50 லட்­சம் மதிப்­புள்ள 500 கிலோ கஞ்­சா­வை­யும் எலிகள்­தான் உட்­கொண்­ட­னவா என்­பதற்கான ஆதா­ரங்­க­ளைத் திரட்ட வேண்­டும் என உத்தரவிட்டுள்ளனர்.

ஆக்ரா, மதுரா உள்­ளிட்ட பகுதி­களில் கஞ்சா புழக்­கத்தை தடுக்­கும் வகை­யில் காவல்­துறை அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் சிறப்புப் போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­யின் கீழ் இந்த ஆண்டு பறி­மு­தல் செய்யப்­பட்ட கஞ்சா, இதர போதைப்­பொ­ருள்­கள் தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

அப்­போது எலி­கள்தான் கஞ்­சாவைத் தின்­றி­ருக்க வேண்­டும் என காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் ஏதும் கைவசம் இல்லை என காவல்­துறை தெரி­வித்­தது.

எனினும், மீண்டும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு எடாஹ் என்ற மாவட்­டத்­தில் இதே­போல் காவல் நிலை­யத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ரூ.35 லட்­சம் மதிப்­புள்ள 1,400 பெட்டி மது­பா­னங்­களை எலி­கள் குடித்­து­விட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தி­ருந்­தது.