இந்தியாவின் செயல்பாட்டுக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் பாராட்டு

இந்தியாவின் செயல்பாட்டுக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் பாராட்டு

2 mins read
16b3a7c8-fbad-4814-99c3-506ae396e951
-

புது­டெல்லி: பயங்­க­ர­வாத தடுப்பு நட­வ­டிக்­கை­களில் இந்­தி­யா­வின் செயல்­பாட்­டுக்கு ஐநா பாது­காப்பு மன்­றம் பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

பாது­காப்பு மன்­றத்­துக்கு தலைமை­யேற்று இந்­தியா சிறப்­பா­கச் செயல்­பட்­ட­தா­க­வும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை­களில் நவீன, புதிய தொழில் நுட்பங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் இந்­தியா முன்­னோ­டி­யாக இருந்­தது என்­றும் அம்­மன்றம் கூறி­யுள்­ளது.

"முன்­னோக்­கிச் செல்­லும் வகை ­யில் பயங்கரவாதத்துக்கு எதிரான டெல்லி பிர­க­ட­னத்தை வர­வேற்று ஏற்­கி­றோம். இது பயங்­க­ர­வா­தி­களின் புதிய அணு­கு­மு­றை­களை எதிர்கொள்வது தொடர்­பில் முக்­கிய மைல்­கல்­லாக அமை­யும்," என்று டெல்­லி­யில் நடை­பெற்ற சிறப்­புக் கூட்­டம் ஒன்றில் பேசு­கை­யில் பாது­காப்பு மன்றத்­தின் தலை­வர் ஹெரால்ட் அத்­லய் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக, இந்­தச் சிறப்­புக் கூட்­டத்தை நடத்­தி­ய­மைக்­காக இந்­திய அர­சுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். பயங்­க­ர­வா­தி­களும் புதிய, நவீன தொழில்­நுட்­பங்­களை பயங்­க­ர­வாத வேலை ­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் கடந்த அக்­டோ­பர் மாதம் சிறப்­புக் கூட்­டம் ஒன்று நடை­பெற்­ற­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அவ­ரது இக்­க­ருத்தை மேலும் பல நாடு­கள் வர­வேற்­றன. பாது­காப்பு மன்­றத்­தின் சிறப்­புக் கூட்­ட­மா­னது, மும்பை, டெல்லி ஆகிய இரு நக­ரங்­களில் நடை­பெற்­றது. வழக்­க­மாக இத்­த­கைய சிறப்­புக் கூட்­டங்­கள் ஐநா மன்­றத்­தின் தலை­மை­ய­கத்­தில்­தான் நடை­பெ­றும்.

தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான மோதல் என்ற கருப்­பொ­ரு­ளு­டன்­இந்த சிறப்­புக் கூட்­டம் நடை­பெற்­றது என­வும் ஆளில்லா வானூர்தி­கள், நவீன தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்­டவை குறித்து இந்­தக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டன.

கூட்­டத்­தில் பேசிய ஐநாவுக்கான சீனா­வின் நிரந்­தர துணைப் பிரதி­நிதி, இந்­தி­யா­வின் நட­வ­டிக்­கை­களா­னது புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சவால்­களை சிறப்­பாகக் கையாள்­வது தொடர்­பான உறுப்பு நாடு­க­ளின் முயற்­சி­க­ளுக்கு ஊக்­கம் அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

பயங்­க­ர­வா­தத்­துக்­கான நிதி­யுதவி பல்­வேறு புது வழி­க­ளின் மூலம் வழங்­கப்­ப­டு­வது தெரிய வந்­த­தாக ஃபிரா­னஸ் பிர­தி­நிதி கூறி­னார்.

இதே­போல் ஃபிரான்ஸ், பிரேசில் ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ரசு, ரஷ்யா, பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­க­ளின் பிர­தி­நி­தி­களும் இந்­தி­யா­வின் தலை­மைத்­து­வம் சிறப்­பாக இருந்­த­தா­கப் பாராட்டு தெரி­வித்­த­னர்.