போக்குவரத்துக்கு அறவே தகுதியற்ற 36 பாலங்கள்

1 mins read
5a9bb5f0-0208-4cf1-8703-83e92af09506
-

ஆக்ரா: உத்­த­ரகண்ட் மாநி­லத்­தில் மக்­கள் பயன்­பாட்­டில் உள்ள 36 பாலங்­கள் பாது­காப்­பற்ற நிலையில் உள்­ள­தாக அண்­மைய ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அண்­மை­யில் குஜ­ராத் மாநிலத்­தில் பா­லம் இடிந்­து ­வி­ழுந்த விபத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பலி­யா­கி­னர். இது­கு­றித்து விசா­ரணை நடந்து வரும் நிலை­யில், உத்­த­ர­கண்ட் மாநி­லத்­தில் முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­யாக அங்­குள்ள பாலங்­கள் குறித்து ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

மாநி­லத்­தில் உள்ள அனைத்து பாலங்­க­ளை­யும் மூன்று வாரங்­களுக்­குள் பாது­காப்புத் தணிக்கை செய்­யு­மாறு மாநில பொதுப்­ப­ணித்­து­றைக்கு முதல்­வர் உத்­த­ர­விட்­டார். இதை­ய­டுத்து அதி­கா­ரி­கள் பல்­வேறு குழுக்­கள் அமைத்து ஆய்வு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­னர். அப்­போது, பல பாலங்­களில் சீர­மைப்­புப் பணிகளை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

"மேலும் 36 பாலங்­கள் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு தகு­தி­யற்­ற­வை­யாக உள்­ளன. குறிப்­பாக பாவ்ரி மாவட்­டத்­தில் அதி­க­பட்­ச­மாக 16 பாலங்­கள், தகு­தி­யற்ற பாலங்­களாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை போக, மேலும் ஏழு மாவட்­டங்­களில் உள்ள இரு­பது பாலங்­கள் மிக மோச­மான நிலை­யில் உள்­ளன," என்று ஆய்­வுக்­குப் பின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதையடுத்து பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பாலங்களைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.