அடிமை மனநிலையில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும்: மோடி வலியுறுத்து

அடிமை மனநிலையில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும்: மோடி வலியுறுத்து

1 mins read
aba0e739-4576-4681-a327-374340c6e2f0
-

புது­டெல்லி: மக்­கள் அடிமை மன­நி­லை­யி­லி­ருந்து வெளி­யேற வேண்­டும் எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், நாட்­டின் வள­மான பாரம்­ப­ரி­யம் குறித்து பெருமை கொள்ள வேண்­டிய நேரம் வந்­துள்­ளது என்­றார்.

முகா­ல­யர்­களை எதிர்த்து போரிட்டு அசாம் கலா­சா­ரத்தை காத்த வீரர் லச்­சித் போர்­பு­கா­னின் 400ஆவது பிறந்த ஆண்­டின் நிறைவு விழா டெல்­லி­யில் நடை­பெற்­றது.

இதில் பங்­கேற்று பேசிய அவர், நாட்­டின் சிறந்த தலை­வர்­கள் பல­ரது பங்­க­ளிப்­பு­கள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் இந்­தி­யா­வின் வர­லாறு திரும்ப எழு­தப்­பட வேண்­டும் என்றார்.

"இந்­தி­யா­வின் வர­லாறு வீரர்­களின், வெற்­றி­யின் வர­லாறு. தியா­கம், சுய­ந­ல­மற்ற துணிச்­ச­லான வர­லாற்றை கொண்­டது இந்­தியா. ஆனால் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக சுதந்­தி­ரத்துக்­குப் பிற­கும்­கூட ஆங்கிலே­யர் ஆட்சி கால சதி­யின் ஒரு பகு­தி­யாக எழு­தப்­பட்ட வர­லாறு தொடர்ந்து கற்­பிக்­கப்­ப­டு­கிறது.

"சுதந்­தி­ரத்­துக்­குப்­பின் அடிமை கொள்கை மாறி­யி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை. அடிமை மன­நி­லை­யில் இருந்து வெளி­யேறி, நாட்­டின் வள­மான கலாசா­ரத்­தில் நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்­டிய நேரம் இது," என்­றார் பிர­த­மர் மோடி.