ராகுல்: அச்சத்தை அகற்றினால் வெறுப்புணர்வு மறையும்

ராகுல்: அச்சத்தை அகற்றினால் வெறுப்புணர்வு மறையும்

1 mins read
e1de5aa4-4add-4984-9da8-b7e2afa942c8
மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி. படம்: ஊடகம் -

போபால்: தனது பாட்­டி­யும் தந்தையும் கொல்­லப்­பட்ட போதி­லும் தாம் யாரி­ட­மும் வெறுப்­பு­ணர்­வைக் காட்­டி­ய­தில்லை என்­கி­றார் காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி.

தமது இத­யத்­தில் காதல் மட்­டுமே மலர்ந்­தது என்­றும் மன­தில் இருந்து அச்­சத்­தைப் போக்­கி­விட்­டால் வெறுப்­பு­ணர்வு மறைந்­து­வி­டும் என்­றும் அவர் தமது நடைப்­ப­ய­ணத்­தின் போது தெரி­வித்­துள்­ளார்.

குமரி முதல் காஷ்­மீர் வரை நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்­டுள்ள ராகுல் நேற்று முன்­தி­னம் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் தமது பய­ணத்தை தொடர்ந்­தார்.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் அனை­வ­ருக்­கும் சம உரி­மை­களை வழங்கி உள்­ளது என்­றார்.

"என் பாட்டி 32 தோட்டாக்களை உடலில் வாங்கிய நிலையில் கொல்லப்பட்டார், என் தந்தையும் கொல்லப்பட்டார். ஆனால் யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகிய நாள், என் இதயத்தில் காதல் மட்டுமே மலர்ந்தது, "வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. நான் வெறுப்பை வளர்க்கவில்லை," என்றார் ராகுல் காந்தி.

மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பில் இருந்து தோன்றியவை என்றும் அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை என்றும் அவர் குறிப்பிட்டார்.