'உலகளாவிய சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது'

'உலகளாவிய சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது'

2 mins read
e019ef97-8be5-4e59-8e9c-b7364f63324d
-

மோடி: ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு

புது­டெல்லி: அமைதி, ஒற்­றுமை அல்­லது நீடித்த வளர்ச்சி போன்ற உல­க­ளா­விய நலன் சார்ந்த சவா­லான அம்சங்­க­ளுக்கு இந்­தி­யா­வி­டம் தீர்வு உள்­ளது என மன் கி பாத் (மன­தின் குரல்) வானொலி நிகழ்ச்­சி­யில் பேசும்­போது பிரதமர் மோடி குறிப்­பிட்­டார்.

இது தொடர்பாக இந்தியா கூடுதல் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

"இந்­தியா ஜி20 அமைப்­புக்கு தலை­மைத்­து­வம் பெற்­ற­த­னால், நாடு முழு­வ­தி­லும் இருந்து மக்­கள், அவர்­கள் அடைந்த பெரு­மையைப் பற்றி எனக்கு கடி­தம் எழு­து­கின்­றனர்.

"அம்­ரித் கால் திட்­டத்­தின் கீழ் இந்த வாய்ப்பை இந்­தியா பெற்றது. இது மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்தது. ஜி20 தலை­மைத்­து­வம் நமக்கு கிடைத்த நல்­ல­தொரு வாய்ப்பு.

"நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்­கா­லம் என்ற கருப்­பொருளைக் கொண்டு இயங்­கு­கி­றோம்," என்­றார் பிர­த­மர் மோடி.

'மன­தின் குரல்' நிகழ்ச்சி நூறா­வது பகு­தியை நோக்­கிச் சென்று கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், நாட்டு மக்­க­ளு­டன் தொடர்பு கொள்­வ­தற்­கான முக்­கிய நிகழ்ச்­சி­யாக இது உள்­ளது என்­றார்.

இதை­ய­டுத்து உத்­த­ரப் பிரதேசம், ஜார்க்­கண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்த இரு­வ­ரது செயல்­பா­டு­களை அவர் பாராட்­டி­னார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் லக்னோ நகரைச் சேர்ந்த ஹர்­தோய் கிராமத்­தில் வசிக்­கும் ஜதீன் லலித் சிங் என்­ப­வர், இரண்டு ஆண்­டு­களுக்கு முன்­னர் சமூக நூல­கம் ஒன்றைத் தொடங்கி அதை வழி­ந­டத்தி வரு­வ­தா­க­வும் ஜார்க்­கண்டை சேர்ந்த சஞ்­சய் காஷ்­யப் என்­ப­வர் நூலக மனி­தன் என குழந்­தை­கள் மத்­தி­யில் அறி­யப்­ப­டு­கி­றார் என்­றும் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

"யாரே­னும் அறிவை நன்­கொடை­யாக அளிக்­கி­றார்­கள் என்­றால், சமூக நலன்சார்ந்த உன்­னத பணி­யைச் செய்­கின்­ற­னர் என்று அர்த்­தம்.

"நாடு முழு­வ­தும் இன்று இது­போன்ற முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது பெரு­ம­கிழ்ச்­சியை அளிக்­கிறது," என்­றார் பிர­த­மர் மோடி

லலித் சிங்­கின் நூல­கத்­தில் இந்தி மற்­றும் ஆங்­கில இலக்­கி­யம், கணினி, சட்­டம், அரசுத் தேர்­வு­களுக்­கான பல புத்­த­கங்­கள் என மூவா­யி­ரம் புத்­த­கங்­கள் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர், கிரா­மத்­தில் இருந்து நாள்­தோ­றும் வரக்­கூ­டிய 80 குழந்­தை­கள் விளை­யா­டு­வ­து­டன், நூல­கத்­தில் படிக்­க­வும் செய்­கின்­ற­னர் என்­றார்.

ஜார்க்­கண்­டின் பல மாவட்­டங்­களில் ஏழை மற்­றும் பழங்­கு­டி­யின மக்­கள் நலன்­க­ளுக்­காக நூல­கங்­களை சஞ்­சய் காஷ்­யப் நூல­கங்­க­ளை திறந்­துள்­ளார் என்­றும் அவ­ரது செயல்­பாடு ஒரு சமூக இயக்க வடி­வத்­தைப் பெற்­றுள்­ளது என்­றும் பிர­த­மர் மோடி மேலும் கூறி­னார்.