ராகிங் கொடுமை: நீதிபதி விசாரணைக்கு உத்தரவு

ராகிங் கொடுமை: நீதிபதி விசாரணைக்கு உத்தரவு

2 mins read
6856f8b3-ca94-48e7-9186-99f9092a4fa2
பல்கலைக்கழக விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஆனந்த் சர்மா சிகிச்சை பெறுகிறார். படம்: தகவல் ஊடகம் -

திப்­ரூ­கர்: அசாம் மாநி­லத்­தில் உள்ள திப்­ரூ­கர் பகுதியில் உள்ள பல்­க­லைக்­க­ழக விடு­தி­யில் நடந்த ராகிங் சம்­ப­வம் குறித்து நீதிபதியின் விசாரணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக திப்­ரூ­கர் துணை ஆணை­யர் பிஸ்­வ­ஜித் பெகு தெரி­வித்­துள்­ளார்.

பல்­க­லைக்­க­ழக விடு­தி­யில் தங்கி படித்து வந்த முது­கலை முத­லாம் ஆண்டு மாண­வ­ரான ஆனந்த் சர்­மாவை அங்­கி­ருந்த மூத்த மாண­வர்­கள் 'ராகிங்' செய்­துள்­ள­னர்.

அவர்­க­ளின் கொடு­மை­யில் இருந்து தப்­பிக்க வேறு வழி தெரி­யா­மல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இரண் டாவது மாடி­யிலிருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்­துள்­ளார்.

இதில் படு­கா­யம் அடைந்த மாண­வரை உட­ன­டி­யாக மருத்­துவ மனை­யில் சேர்த்­துள்­ள­னர்.

அவருடைய உடல்­நிலை சற்று தேறி வரு­வ­தா­கவும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவ­ருக்­குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்­கப்­பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது­கு­றித்து மாண­வ­ரின் தாய் சரிதா சர்மா காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்துள்ளார். அதில், என் மகனை உடல், மன ரீதி­யாக சித்­தி­ர­வதை செய்து, அவன் வைத்­தி­ருந்த பணத்­தை­யும் கைப்­பே­சி­யை­யும் பறித்­துள்­ள­னர்.

கட்­டா­யப்­ப­டுத்தி அவனது வாயில் மதுவை ஊற்றி, கஞ்சா புகைக்க வைத்­துள்­ள­னர். அந்­தப் புகைப்­ப­டங்களை வைத்­துக்­கொண்டு என் மகனைக் கொடு­மைப்படுத்தி உள்­ள­னர் என்று குற்­றம்சாட்­டி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து, பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்­னாள் மாண­வர் ஒரு­வர், இப்­போது படித்து வரும் நான்கு மாணவர்­கள் என ஐவரை கைது செய்து விசா­ரித்து வரு­வ­தாக திப்­ரூ­கார் மாவட்ட எஸ்.பி. கூறி­யுள்­ளார்.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் 21 மாண­வர்­களை இடை­நீக்­கம் செய்து பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கம் நட­வடிக்கை எடுத்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வத்­திற்கு கண்ட னம் தெரி­வித்­துள்ள அசாம் கல்வி அமைச்­சர் டாக்­டர் ரனோஜ் பெகு, "இது­போன்ற செயல்­களை ஒரு போதும் பொறுத்­துக்கொள்ள முடி­யாது. இந்தச் சம்­ப­வங்­கள் இனி­யும் நடக்­கா­மல் பல்­க­லைக்கழக அதி­கா­ரி­கள் விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும். முன்­னாள் மாண­வர்­களை விடு­தி­களில் தங்க அனு­ம­திக்­கக் கூடாது," என்று கூறி­னார்.