ஃபிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடையுடன் இருந்த வீட்டில் திடீரென தீமூண்டதில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
தீக்காயங்களுடன் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஃபிரோசாபாத் நகரில் மின்னியல் மற்றும் நகைக்கடையை ராமன்குமார் என்பவர் நடத்தி வந்து உள்ளார். கடைக்கு மேலே உள்ள முதல்தளத்தில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
18 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. ஃபிரோசாபாத் மாவட்டம், ஜஸ்ரானாவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குண மடைய பிரார்த்திப்பதாகவும் பாதிக் கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் அவர் உத்தர விட்டுள்ளார்.

