புதுடெல்லி: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 'ஆர்கானிக்' ரக அரிசி, உடைந்த இட்லி அரிசி, நொய் அரிசிகளை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்த அரிசி ரகங்களின் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
பாஸ்மதி அல்லாத 'ஆர்கானிக்' அரிசி, குருணை அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசு நீக்கியுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அரிசி தட்டுப்பாடு ஏற்பட நேரி டும் என்ற அச்சம் விலகியதை அடுத்து, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் அரிசி ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா.
இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப் பட்டு வரும் நிலையில், உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 விழுக் காடாக உள்ளது.
2021-22ஆம் ஆண்டில் இந்தியா 21.1 டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது என்றாலும், இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் வயல்களின் பரப்பளவு ஆறு விழுக்காடாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, 2022-23ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ள தாக முன்னுரைக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
அத்துடன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்நாட்டுச் சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசிகளின் விலையும் உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து, குருணை அரிசியின் உள்நாட்டுப் புழக்கத்தை அதிகரிக்க அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது.
இந்தச் சூழலில் இப்போது 'ஆர்கானிக்' அரிசி, குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கிக்கொண்டு உள்ளது. குறிப்பிட்ட இந்த அரிசி களின் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இம்முடிவை எடுத்துள்ள தாகவும் அரசு தெரிவித்துள்ளது.

