திருப்பதி ரயிலுக்குத் தீவைப்பு; பதற்றத்துடன் பயணிகள் ஓட்டம்

திருப்பதி ரயிலுக்குத் தீவைப்பு; பதற்றத்துடன் பயணிகள் ஓட்டம்

1 mins read
fcb4fb13-4197-4ea7-b10b-98979062abc6
-

திருப்­பதி: திருப்­பதி ரயில் நிலை யத்­தில் இருந்து புறப்­ப­டத் தயா­ராக இருந்த விரைவு ரயி­லுக்கு சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் சிலர் தீ வைத்தனர்.

திருப்­ப­தி­யில் இருந்து விசா­கப்­பட்டினத்­திற்கு வழக்­கம்­போல் நேற்று காலை 5.30 மணிக்கு திரு­மலா விரைவு ரயில் புறப்­ப­டத் தயா­ராக இருந்­த நிலையில், 'எஸ்-6' பெட்­டி­யில் உள்ள கழி­வறை­யில் இருந்து திடீரென கரும்­புகை கிளம்­பி­யது. இதைக்கண்டு அதிர்ந்த பய­ணி­கள் கூச்­ச­லிட்­ட­படி அவ­சர அவ­ச­ர­மாக தங்­கள் உட­மை­களை எடுத்­துக்­கொண்டு ரயி­லில் இருந்து இறங்கி ஓடி­னர்.

இதைப்பார்த்து பக்கத்துப் பெட்டிகளில் இருந்த பயணி களும் இறங்கினர்.

இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே காவ­லர்­களும் அதி­காரி களும் புகை வந்த கழிவறையைத் திறந்துபார்த்தபோது, தீ மளமள வென எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக அங்கிருந்த தீத்தடுப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசா ரணையில், கழிவறைக்குச் சென்ற வர்கள் சிகரெட் பிடித்துவிட்டு அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனால் கழிவறை எரிந்து நாசமானது. இதுகுறித்து திருப்­பதி ரயில்வே காவலர்கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.