தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளில்லா வானூர்தி வீசிய 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

2 mins read
51d00c59-d1f0-40f3-9827-41ec1d19cce0
கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஹெராயின் போதைப்பொருளை வீசும் நான்கு சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் காவல் துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில் 5.6 கிலோ ஹெராயின் போதைப்பொளுடன் இந்த ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.படம்: இந்திய ஊடகம் -

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லம், ஃபாசில்கா பாவட்­டத்­தில் உள்ள இந்­தியா-பாகிஸ்­தான் எல்­லைப் பகு­தி­யில் பாகிஸ்­தா­னி­லி­ருந்து பறந்து வந்த ஆளில்லா வானூர்தி மூல­மாக வீசப்­பட்ட 25 கிலோ ஹெரா­யின் போதைப்­பொ­ருள் எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் மீட்­கப்­பட்­டது.

பஞ்­சாப்­பில் பக­வந்த் மான் தலை மையி­லான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலை­யில், இங்­குள்ள சுரி­வாலா சுஸ்தி கிரா­மத்­தில் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு நேரத்­தில் எல்லைப் பாது­காப்­புப் படை­யி­னர் பணி­யில் ஈடு­பட்­டுக்கொண்டிருந்­த­னர்.

அப்­போது, அண்டை நாடான பாகிஸ்­தா­னில் இருந்து பறந்து வந்த ஆளில்லா வானூர்தி ஒன்று, வானில் வட்டமிடு­வ­தைக் கண்­காணித்து எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னர் அதனை நோக்கிச் சுட்­ட­னர்.

இதை­ய­டுத்து, இந்­தத் தாக்­கு­தலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆளில்லா வானூர்தி பாகிஸ்­தானுக்கே திரும்­பிச் சென்­றது.

அதன்­பி­றகு, அங்­குள்ள பகு­தி­களில் நடை­பெற்ற தேடு­தல் வேட்­டை­யில் 7.5 கிலோ ஹெரா­யின், ஒரு கைத்­துப்­பாக்கி, 50 தோட்­டாக் கள் ஆகியன எல்­லைப் பாது­காப்புப் படையின­ரால் கைப்­பற்­றப்­பட்­டன. தொடா்ந்து நடந்த தேடு­தல் வேட்­டை­யில், மேலும் ஏழு பொட்டலங்­களில் இருந்த 17.5 கிலோ ஹெரா­யின் என மொத்­த­மாக 25 கிலோ போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டது.

ஆளில்லா வானூர்தி மூலம் வீசப்­பட்ட பொருள்­களை எடுத்­துச் செல்ல சிலா் அப்­ப­கு­தி­யில் சுற்­றித் திரிந்­தனா். அவா்களை நோக்கி வீரா்கள் சுட்­ட­தும் அவா்கள் தப்­பித்து ஓடி­விட்­டனா்.

இதற்கு முன்­ன­தாக பாகிஸ்­தா­னில் இருந்து வந்த மூன்று ஆளில்லா வானூர்திகள் எல்­லைப் பாது­காப்புப் படை­யி­ன­ரால் சுட்டு வீழ்த்­தப்­பட்டு, 15 கிலோ போதைப் பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன.