குஜராத் தேர்தல்: 'வித்தியாசமாக ஏதாவது செய்யுங்கள்' என கெஜ்ரிவால் வேண்டுகோள்

குஜராத் தேர்தல்: 'வித்தியாசமாக ஏதாவது செய்யுங்கள்' என கெஜ்ரிவால் வேண்டுகோள்

2 mins read
b4c134af-649b-40f5-b906-4b870c3ac9b0
-
multi-img1 of 2

வரிசையில் நின்று வாக்களித்த மோடி

அக­ம­தா­பாத்: குஜ­ராத் சட்­டப் பேர­வைத் தேர்­த­லின் இரண்­டாம், இறு­திக் கட்­டத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு 93 தொகுதிகளில் பலத்த பாது­காப்­பு­டன் நடைபெற்­றது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்­குப்­ப­திவு தொடங்­கி­ய­துமுதல் நீண்ட வரி­சை­யில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்­க­ளித்­த­னர்.

அக­ம­தா­பாத்­தில் உள்ள சபர்மதி ரணிப் பகு­தி­யில் அமைக்­கப்பட்­டி­ருந்த வாக்­குச்­சா­டி­யில் மக்­களோடு மக்­க­ளாக வரி­சை­யில் நின்று பிர­த­மர் மோடி வாக்­க­ளித்­தார்.

வாக்­க­ளித்­த­பின் தனது விர­லில் வைக்­கப்­பட்­டிருந்த மையைக் காண்­பித்து, அனை­வ­ரும் வாக்­க­ளிக்கவும் அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

முன்­ன­தாக, தன் டுவிட்­டர் பதி­வில், "குஜ­ராத்­தின் இரண்­டாம் கட்­டத் தேர்­த­லில் குறிப்­பாக இளை­ஞர்­களும் பெண்­களும் திர­ளாக வந்து வாக்­க­ளிக்க வேண்­டு­கிறேன்," எனப் பதி­விட்­டி­ருந்­தார்.

அக­ம­தா­பாத்­ நக­ரில் உள்ள நாரன்­புரா பகு­தியில் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா வாக்­க­ளித்தார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், "இம்முறை வித்தி யாசமாக ஏதாவது செய்யுங்கள்," என குஜராத் வாக்காளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

"ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் கால் பதிக்க கடுமையாக உழைத்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் அரிய வாய்ப்பாகக் கிடைத்துள்ளது. குஜராத்தின் முன் னேற்றத்திற்காக வாக்களியுங்கள். ஒரு வித்தியாசமான, அற்புதமான முயற்சியைச் செய்யுங்கள்," என கெஜ்ரிவால் டுவிட் செய்திருந்தார்.

காங்­கி­ரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்­ளிட்ட பல்­வேறு கட்­சி­க­ளைச் சேர்ந்த 833 வேட்­பா­ளர்­கள் இந்த இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

ஆட்­சி­யைத் தக்கவைத்­துக்­கொள்ள பாஜ­க­வும் மீண்­டும் ஆட்சி­யைக் கைப்­பற்­றும் முனைப்­பில் காங் ­கிரசும் புதிய புரட்­சி படைக்க ஆம் ஆத்­மி­யும் காய் நகர்த்தி உள்ளன.

பதற்­றம் நிறைந்த வாக்­குச்­சாவடி ­களில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்டிருந்தன.