தேஜஸ்வி யாதவ்: முடிந்தது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தை நலமுடன் உள்ளார்

2 mins read
28a12b9a-c39b-4c34-82d1-c856ce9f6f14
-

பாட்னா: சிங்­கப்­பூ­ரில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஷ்ட்­ரிய ஜனதா தளம் தலை­வ­ரும் பீகார் மாநி­லத்­தின் முன்­னாள் முதல்­வ­ரு­மான லாலு­பி­ர­சாத் யாதவ், 74, நல­மு­டன் இருப்­ப­தாக அவ­ரது மக­னும் பீஹார் துணை முதல்­வ­ரு­மான தேஜஸ்வி யாதவ் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் வசித்து வரும் லாலு­வின் மகள் ரோகிணி ஆச்­சார்­யா­வின் ஒரு சிறு­நீ­ர­கம் லாலுக்­குப் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

கால்­ந­டைத் தீவன வழக்­கில் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட லாலு பிர­சாத், பல்­வேறு உடல்நலப்­பி­ரச்­சி­னை­கள் கார­ண­மாக பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ருக்­குச் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை செய்­யும்­படி சிங்­கப்­பூர் மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­தி­யதை அடுத்து, லாலு­வின் மூத்த மக­ளான ரோகிணி ஆச்­சார்யா தனது தந்­தைக்கு சிறு­நீ­ர­கத்தை தான­மாக தர முன்­வந்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சைக்­காக லாலுவின் குடும்பத்தினர் அண்­மை­யில் சிங்­கப்­பூருக்கு வந்தனர்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் மருத்­துவமனை­யில் அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடந்­து முடிந்ததாக லாலு­வின் மகன் தேஜஸ்வி டுவிட்­ட­ரில் தக­வல் தெரி­வித்­துள்­ளார்.

''சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக முடிந்­தது. என் தந்தை தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு நல­மு­டன் உள் ளார். எனது சகோ­தரி ரோகிணி­யும் நல­மு­டன் இருக்­கி­றார். பிரார்த்­தனை செய்த அனை­வ­ருக்­கும் நன்றி,'' எனக் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், ரோகிணி ஆச்­சா­ர்யாவுக்கு பாஜக மூத்த தலை­வர் கிரி­ராஜ் சிங் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

தன் டுவிட்டர் பதி­வில், "நீங்­கள் ஒரு முன்னுதா­ர­ண­மான மகள். உங்­களை நினைத்து பெரு­மைப்­படு­கி­றேன். எதிர்காலத் தலை­முறை­யி­ன­ருக்கு உதா­ர­ண­மாகத் திகழ்­வீர்­கள்," என குறிப்­பிட்­டுள்­ளார்.