வாக்குறுதியை காப்பாற்றினார்

1 mins read
b782abcd-e841-45bc-96a0-203a20f96d3b
-

போபால்: ஹெ­லி­காப்­டர் பய­ணத்­துக்கு ஏற்­பாடு செய்­வ­தாக மத்­திய பிர­தே­சத்தை சேர்ந்த மூன்று சிறுமி ­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியைக் காப்­பாற்றி உள்­ளார் ராகுல் காந்தி.

அண்­மை­யில் தாம் மேற்­கொண்ட பாத யாத்­தி­ரை­யின்­போது மூவ­ரை­யும் சந்­தித்­தார் ராகுல்.

9, 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி­க­ளான மூவ­ரும் ஹெலி­காப்­ட­ரில் பய­ணம் செய்ய விரும்பு­வ­தாக அவ­ரி­டம் கூறி இருந்­த­னர்.

அதை நிறை­வேற்­று­வ­தாக ராகுல் உறுதி அளித்­தி­ருந்­தார். அதன்­படி, நேற்று முன்­தி­னம் மூன்று மாண­வி­க­ளுக்­கா­க­வும் ஹெலி­காப்­டர் பய­ணத்தை ஏற்­பாடு செய்­தார். மாண­வி­கள் இத­னால் மிகுந்த உற்­சா­க­ம­டைந்­த­னர்.