புதுடெல்லி: ஏர் இந்தியாவை எடுத்து நடத்திவரும் டாடா குழுமம், 500 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் இரு பெரிய விமான நிறுவனங்களான ஏர்பஸ், போயிங் ஆகியவற்றிலிருந்து 500 விமானங்களை வாங்க வரலாற்றுச் சிறப்புமிக்க தருவிப்பு உத்தரவை டாடா பிறப்பித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இவற்றில் 400 நீண்ட விமானங்களும் 100க்கும் மேற்பட்ட அகண்ட விமானங்களும் ஏர் இந்தியா வாங்குவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவிக்கிறது. இதன் மதிப்பு நூறு பில்லியன் டாலர் இருக்கும். ஒரே விமான நிறுவனம் இவ்வளவு விமானங்களை வாங்குவது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக மாறி வரும் ஏர் இந்தியா, அண்மையில் அதன் தாய் நிறுவனமான டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறது.
அடுத்த ஆண்டுக்குள் இந்த இணைப்புகள் முடிவுக்கு வரவிருக்கின்றன. இதனால் இந்தியாவுக்குள் அதிக இடங்களுக்கும் வெளி நாடுகளில் அதிக இடங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமாக 'ஏர் இந்தியா' உருவெடுத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மலிவு விலை விமானச் சேவை, எக்ஸ்கியூட்டிவ் விமானச் சேவை வரை அனைத்து விதமான சேவைகளையும் பயணிகளுக்கு வழங்கும் நிறுவனமாக அது மாறி வருகிறது.
மேலும் மத்திய அரசிடம் பெரும் தொகை கொடுத்து வாங்கிய ஏர் இந்தியாவை விரைவில் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தீவிரமாக உள்ளார்.
இருந்தாலும் 500 விமானங்கள் வாங்குவது குறித்து டாடா, ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறு வனத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் டாடா குழுமம் வெற்றி அடைந்த நிலையில் டாடா குழுமம், தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று நிறு வனங்களையும் இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது.
இந்த இணைப்புக்குப் பிறகு மொத்தம் 217 விமானங்களுடன் ஏர் இந்தியா மாபெரும் நிறுவனமாக செயல்படவிருக்கிறது.
விமான நிலையத்தில்
குழப்பம், நெரிசல்
இதற்கிடையே டெல்லி விமான நிலையத்தில் கூட்டமும் குழப்பமாக இருப்பதாகவும் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க நேரிடு கிறது என்றும் வலைத் தளங்களில் புகார்கள் பரவியதால் நேற்று அந்த விமான நிலையத்துக்கு திடீர் வருகையளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நிலை மையை நேரில் கண்டறிந்தார்.

