'காசி-தமிழகம் ஆன்மீகத் தொடர்பு புதுப்பிப்பு'

'காசி-தமிழகம் ஆன்மீகத் தொடர்பு புதுப்பிப்பு'

1 mins read
b2ce0e99-8e0b-4981-b5d8-cd5211175eaf
-

வார­ணாசி: தமி­ழ­கத்­துக்­கும் காசிக்­கும் இடையில் உள்ள ஆன்­மீ­கத் தொடர்பை பிர­த­மர் மோடி புதுப்­பித்­துள்­ளார். அந்த வகை­யில் தமி­ழக கலை, இலக்­கி­யங்­களை பிர­ப­லப் ­ப­டுத்த வேண்­டும் என்று மத்­திய தக­வல், ஒலி­ப­ரப்­புத் துறை அமைச்­சர் அனு­ராக் தாக்­கூர் வலியுறுத்தி உள்ளார்.

"காசி தமிழ் சங்­க­மத்தை முன்­னெ­டுத்த பிர­த­ம­ருக்கு நன்றி, பிர­த­ ம­ரின் முயற்­சி­யால் தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்து 2,500 பேர் காசிக்கு வந்தனர். காசிக்கு வந்த 2,500 பேர், 25,000 சுற்­று­லாப் பய­ணி­களை மீண்­டும் காசிக்கு அழைத்து வரு­வார்­கள். எனவே இது ஆரம்­பம்­தான். காசி தமிழ் சங்­க­மம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்­க­வில்லை. காசி­ யுடன் தொடர்­பு­டைய தென்­காசி உள்­பட தமி­ழ­கத்­தில் ஏரா­ள­மான ஊர்­கள் உள்­ளன. இந்தத் தொடர்­பு­களை பிர­த­மர் மீண்­டும் உயிர்ப்­பித்துள்ளார்," என்று பனா­ரஸ் இந்து பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற காசி தமிழ்ச் சங்கக் கலா­சார நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் தெரி­வித்­தார். காசி­யு­டன் தொடர்­புள்ள தமிழகப் பகு­தி­க­ளுக்கு உத்­தரப்பி­ர­தேச மக்­கள் செல்ல வேண்டும் என்று கேட்­டுக் கொண்ட அனு­ராக் தாக்­கூர், தமி­ழ­கத்­தின் கலை, கலா சாரம், இலக்­கி­யம் ஆகி­ய­வற்றை பிர­ப­லப்­ப­டுத்த வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னார்.