புதுடெல்லி: அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 450 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அம்மாநிலத்தில் 212 வகையான இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
கல்விக்கும் சுகாதாரத்துக்கும் தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அறிவித்ததைச் செயல்படுத்தி வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதையடுத்து இலவச மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எவருடைய பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் நல்ல தரமான சுகாதாரம், கல்வியை வழங்குவதுதான் டெல்லி அரசின் நோக்கம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
"சுகாதாரம் விலை உயர்ந்ததாகிவிட்டது. பலரால் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு கட்டணங்கள் அதிகரித்துவிட்டன," என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

