தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பயங்கரவாதத்தை வேரறுக்க கடும் நடவடிக்கை தேவை'

2 mins read
8616aebc-ed2f-45d4-93a4-3728c60ce623
-

உலக நாடுகளுக்கு அமெரிக்கா, இந்தியா அழைப்பு

புது­டெல்லி: பயங்­க­ர­வாத செயல்­பா­டு­க­ளை வேரறுக்க உலக நாடு­கள் கடும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் வலி­யு­றுத்தி உள்­ளன.

பயங்­க­ர­வாத செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ரான இந்­திய, அமெ­ரிக்க கூட்டு நட­வ­டிக்கை குழு­வின் 19ஆவது சந்­திப்­புக்­குப் பின்­னர் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் இவ்­வாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வா­தி­கள் அனைத்­து­லக அள­வில் நட­மா­டு­வது குறித்து இரு நாடு­களும் விவா­தித்த நிலை­யில், தங்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் உள்ள நிலப்­ப­கு­தி­கள் பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­பதை உலக நாடு­கள் உறுதி செய்ய வேண்­டும் என அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அல் கய்தா, ஐஎஸ்­ஐ­எஸ், லஷ்­கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்­மட் உள்­ளிட்ட பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எதிர்­கொள்­வது குறித்­தும் அத்­த­கைய அமைப்­பு­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­கள் குறித்­தும் இரு நாடு­களும் கருத்து­களைப் பரி­மா­றிக்கொண்­ட­தாக வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட சந்­திப்­பும் பேச்­சு­வார்த்­தை­யும் டெல்­லி­யில் கடந்த 12, 13ஆம் தேதி­களில் நடை­பெற்­றது.

"எல்லை கடந்த பயங்­க­ர­வா­தம், அனைத்­து­லக தீவி­ர­வா­தம் ஆகி­ய­வற்றை இரு நாடு­களும் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றன. 26/11 மும்பை பயங்­க­ர­வாத தாக்­கு­தல், பதான்­கோட் தாக்­கு­தல் ஆகி­ய­வற்­றுக்கு கார­ண­மா­ன­வர்­கள் நீதி­யின் முன் நிறுத்­தப்­பட வேண்­டும் என்­றும் இரு நாடு­களும் வலி­யு­றுத்­து­கின்­றன," என்று பாகிஸ்­தா­னுக்கு மறை­மு­க­மாக அறி­வு­றுத்­தும் வகை­யில் வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, அரு­ணாச்­சல பிர­தேச மாநில எல்­லை­யில் ஊடு­ருவ முயன்ற சீனத் துருப்­பு­க­ளுக்கு உரிய பதி­லடி கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் சீனப் படை ஓட்­டம்­பி­டித்­தது என்­றும் மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத்­சிங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய தரப்­பில் உயிர்ச்­சே­தம் எது­வும் இல்லை என்­றும் அவர் உறு­தி­ப்ப­டுத்தி உள்­ளார்.

"நமது நாட்­டுக்­குச் சொந்­த­மான பகு­தி­க­ளைக் காப்­ப­தற்கு நமது படை­கள் உறுதி பூண்­டுள்­ளன என்­பதை நாடா­ளு­மன்ற அவை­யில் உறு­தி­ப­டக் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.

"எல்­லை­யில் ஏதே­னும் அத்­து­மீ­றல் முயற்­சி­கள் நடந்­தால், நமது படை­யி­னர் அதை முறி­ய­டிப்­பார்­கள். இந்த துணிச்­ச­லான முயற்­சி­யில் இந்­தி­யப் படை வீரர்­களை ஆத­ரிப்­ப­தில் நமது ஒட்­டு­மொத்த அவை­யும் ஒன்­றி­ணைந்து நிற்­கும் என நான் நம்­பு­கி­றேன்," என்று நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார் அமைச்­சர் ராஜ்­நாத்­சிங்.

இதற்­கி­டையே, இரு நாடு­க­ளின் எல்­லைப் பகு­தி­யில் நிலைமை சீராக இருப்­ப­தாக சீன வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் வாங் வென்­பின் தெரி­வித்­துள்­ளார். இரு தரப்­புக்­கும் இடையே ராணுவ, தூத­ரக ரீதி­யி­லான பேச்­சு­வார்த்­தை­களில் எந்த பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, மத்­திய அர­சின் வெளி­யு­றவுக் கொள்கை முற்­றிலும் தோல்வி அடைந்­து­விட்­ட­தாக காங்­கி­ரஸ் கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது. அத­னால்­தான் எல்­லை­யில் மோதல்­கள் நிகழ்­வ­தாக அக்­கட்சி­யின் மக்­க­ளவை துணைத்­தலை­வர் கவு­ரவ் கோகாய் தெரி­வித்­துள்­ளார்.

"உங்­கள் பல­வீ­னத்தை சீனா அறிந்துகொள்ள விட்­டு­விட்­டீர்­கள். அத­னால்­தான் உங்­கள் ராஜ­தந்­தி­ரத்­தில் தோல்வி ஏற்­பட்­டது," என்று கவு­ரவ் கோகாய் கூறி உள்ளார்.