வடகிழக்கு மாநிலங்களை மத்திய அரசு கைவிட்டது என்கிறார் மம்தா

வடகிழக்கு மாநிலங்களை மத்திய அரசு கைவிட்டது என்கிறார் மம்தா

1 mins read
1f3180f8-0918-47fc-b56d-6e7f9c5af368
-

கோல்­கத்தா: மேகா­ல­யா­வை­யும் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளை­யும் மத்­திய அரசு ஒட்­டு­மொத்­த­மாக புறக்­க­ணித்­து­விட்­டது என திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரும் மேற்கு வங்க மாநில முதல்­வ­ரு­மான மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

மேகா­லயா மாநி­லம் அதன் மண்­ணின் மைந்­தர்­க­ளால் ஆளப்­படு­வதை திரி­ணா­முல் காங்­கி­ரஸ் உறுதி செய்­யும் என்­றும் இதன் பொருட்டு மேகா­லயா மக்­க­ளுக்கு உதவ விரும்­பு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"நாங்­கள் மாற்­றத்­தைக் கொண்டு வரு­வோம். இந்த மாநிலம் வளம் பெறும் என நாங்­கள் உறுதி அளிக்­கி­றோம். மாநி­லத்­தில் உள்ள பெண்­க­ளுக்கு மாதந்­தோ­றும் தலா ஆயி­ரம் ரூபாய் அவர்­க­ளது வங்­கிக் கணக்­கு­களில் நேர­டி­யாக செலுத்­தப்­படும்," என்று மேகா­லய தலை­ந­கர் ஷில்­லாங்­கில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது முதல்­வர் மம்தா பானர்ஜி குறிப்­பிட்­டார்.

மேகா­லய மக்­கள் சிர­மப்­பட்­டது போதும் என்­றும் அம்­மா­நில அரசு அவர்­க­ளைப் புறக்­க­ணித்­தா­லும் அம்­மக்­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கு­வதே தமது நோக்­கம் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அண்­மை­யில், அசாம், மேகா­லய மாநி­லங்­க­ளின் எல்­லைப் பகு­தி­யில் நிகழ்ந்த மோத­லின்­போது சிலர் உயி­ரி­ழந்­த­னர்.

உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு ஐந்து லட்­சம் ரூபாய் நிவா­ர­ணத்­தொகை வழங்­கிய முதல்­வர் மம்தா, துக்க வேளை­யில் மக்­க­ளு­டன் இணைந்­தி­ருப்­பது தமது கடமை என்­றார்.

அண்மைக் காலமாக வடகிழக்கு மாநில அரசியல் களத்திலும் முதல்வர் மம்தா ஈடுபாடு காட்டி வருகிறார். இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அவரது வியூகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.