கேரளா: பல்கலை வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்

1 mins read
311d0a06-64f5-43e6-928b-9b4de086a004
-

திரு­வ­னந்­த­புரம்: பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் வேந்­தர் பத­வி­யில் இருந்து ஆளு­நரை நீக்­கும் மசோதா கேரள சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் பல்­க­லைக்­க­ழக நட­வ­டிக்­கை­களில் ஆளு­ந­ருக்­கான அதி­கா­ரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் அம்­மா­நில ஆளு­நர் ஆரிஃப் முகம்­மது கானுக்­கும் அம்­மா­நில அர­சுக்­கும் இடையே மோதல் நிலவி வரு­கிறது. பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு துணை வேந்­தர், பேரா­சி­ரி­யர்­களை நிய­மிக்­கும் நடை­மு­றை­யில் ஆளு­நர் குறுக்­கி­டு­வ­தாக மாநில அரசு குற்­றம்­சாட்டி உள்­ளது.

இந்­நி­லை­யில், இத்­த­கைய நிய­ம­னங்­களில் தகு­தி­யற்­ற­வர்­க­ளுக்கு பொறுப்­பு­கள் வழங்­கப்­ப­டு­வ­தாக ஆளு­நர் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

முதல்­வர் பின­ராயி விஜ­யன் தலை­மை­யி­லான அரசு இதை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது. மேலும், கடந்த மாதம் இட­து­சாரி கட்­சி­கள் ஒன்­று­சேர்ந்து ஆளு­நர் மாளிகை முன்பு முற்­று­கைப் போராட்­டத்தை நடத்­தி­யது.

கேர­ளா­வில் உள்ள 11 பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தகு­தி­யற்ற துணை வேந்­தர்­கள் இருப்­ப­தாக கூறிய ஆளு­நர் மாளிகை, அனை­வ­ரை­யும் பத­வி­யில் இருந்து நீக்க உத்­த­ர­விட்­டது.

இந்­நி­லை­யில், பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கான வேந்­தர் பத­வி­யில் இருந்து ஆளு­நரை நீக்­கும் மசோதா ஒன்றை சட்­டப்­பே­ர­வை­யில் ஆளும் அரசு நிறை­வேற்றி உள்­ளது. இதற்கு காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­களும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

புதிய மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப் போவ­தில்லை என ஆரிஃப் முகம்­மது கான் ஏற்­கெ­னவே அறி­வித்­து­விட்­டார்.