பள்ளி மாணவி மீது அமிலம் வீசி தாக்குதல்

2 mins read
14671975-8b89-4b30-97bd-8ce6a16b1c79
-

புது­டெல்லி: பள்ளி மாணவி மீது அமி­லம் வீசிப்­பட்ட சம்­ப­வம் நாடு முழு­வ­தும் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், இது தொடர்­பாக மூன்று பேர் கைதாகி உள்­ள­னர்.

டெல்லி உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்­நி­லை­யில், மேற்கு டெல்­லி­யில் 17 வயது பள்ளி மாணவி மீது அமி­லம் வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அம்­மா­ணவி நேற்று முன்­தி­னம் காலை சுமார் 7.30 மணி­ய­ள­வில் தனது தங்­கை­யு­டன் பள்­ளிக்கு நடந்து சென்று கொண்­டி­ருந்­தார்.

அப்­போது இரு­சக்­கர வாக­னத்­தில் வந்த இரு­வர் திடீ­ரென அம்­மா­ண­வி­யின் அருகே வந்­துள்­ள­னர். பின்­னர் அவர்­களில் ஒரு­வர், தன் கையில் வைத்­தி­ருந்த அமி­லத்தை மாண­வி­யின் முகத்தை நோக்கி வீசி­னார். அமி­லம் பட்­டதை அடுத்து அம்­மா­ணவி தன் முகத்தை மூடிக்­கொண்டு வேத­னை­யில் அல­றித் துடிக்க, தாக்­கு­தல் நடத்­திய இரு­வ­ரும் அங்­கி­ருந்து வேக­மா­கச் சென்­று­விட்­ட­னர்.

பத­றிப்­போன மாண­வி­யின் தங்கை அரு­கி­லுள்ள தன் வீட்­டுக்­குச் சென்று தந்­தை­யி­டம் விவ­ரம் தெரி­விக்க, அவர் பத­றி­ய­டித்து சம்­பவ இடத்­துக்கு வந்­துள்­ளார். அதற்­குள் ஆம்­பு­லன்ஸ் வாக­ன­மும் வந்து சேர, மாணவி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்.

அமில வீச்சு கார­ண­மாக மாண­வி­யின் இரு கண்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. முகத்­தில் மோச­மான காயங்­கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் துணியால் முகத்தை மூடியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. எனினும், தன்னைத் தாக்கியவர்கள் யாராக இருக்கக்கூடும் என மாணவி குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளது.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.