கைப்பேசி செயலி மூலம் பணம் வசூலித்து மோசடி: ரூ.51 கோடி முடக்கம்

கைப்பேசி செயலி மூலம் பணம் வசூலித்து மோசடி: ரூ.51 கோடி முடக்கம்

1 mins read
6c43df99-fe93-40b5-b875-21d4dd1db467
-

புது­டெல்லி: பண மோசடி புகார்­கள் குவிந்­ததை அடுத்து 'எம்­பி­எப்' என்ற கைப்­பேசி செய­லிக்கு மத்­திய அரசு தடை­வி­தித்­துள்­ளது. அந்­நி­று­வ­னத்­துக்­குச் சொந்­த­மான ரூ.51 கோடி நிதியை மத்­திய அம­லாக்­கத்­துறை முடக்கி வைப்­ப­தாக அறி­வித்­தது.

நாடு முழு­வ­தும் கைப்­பேசி செயலி மூலம் நடை­பெ­றும் பண மோச­டி­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவற்­றைத் தடுக்க மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், 'எம்­பி­எப்' என்ற கைப்­பேசி செய­லி­யைப் பயன்­படுத்­திய பலர் பணத்தை இழந்து தவிப்­ப­தா­கப் புகார்­கள் எழுந்­தன. இது தொடர்­பாக மேகா­லயா மாநில காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்டு சில­ரைக் கைது செய்­த­னர்.

இந்­தச் செயலி மூலம் பணத்தை முத­லீடு செய்­தால் அதிக வரு­வாய் கிடைக்­கும் எனப் பர­வ­லாக விளம்­ப­ரம் செய்­யப்­பட்­டது.

இந்த விளம்­ப­ரத்­தால் கவ­ரப்­பட்ட ஏரா­ள­மா­னோர் பணத்தை முத­லீடு செய்­த­னர். ஆனால் திடீ­ரென அந்­தச் செயலி இயங்­காமல் போனது வாடிக்­கை­யா­ளர்­கள் மத்தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

அதை உரு­வாக்கி, பண வசூ­லில் ஈடு­பட்ட நிறு­வ­ன­மும் திடீ­ரென மூடப்­பட்­டது. அந்­நி­று­வ­னத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் மாய­மா­கி­னர். வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து வசூ­லித்த பல கோடி ரூபாய் பணம் என்­ன­வா­னது என்று தெரி­யாத நிலை­யில், காவல்­துறை தீவிர விசா­ரணை ஏற்­கொண்­டது.

அதன் பல­னாக, 'எம்­பி­எப்' செய­லி­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளின் வங்­கிக்­க­ணக்­கில் இருந்த ரூ.51 கோடியே 11 லட்­சத்தை அம­லாக்­கத்­துறை முடக்கி உள்­ளது.

நொய்டா, புனே, பெங்­க­ளூரு உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் அம­லாக்­கத்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­வதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.