நான்கு ஆண்டுகளில் 497 பயங்கரவாத வழக்குகள் பதிவு

1 mins read
9952ebf2-367b-4d94-bbe8-d13a69ea2bf7
-

புது­டெல்லி: கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும் தேசிய புல­னாய்வு முகமை 497 பயங்­க­ர­வாத வழக்­கு­க­ளைப் பதிவு செய்­துள்­ளது. இத்­த­க­வலை மத்­திய உள்­துறை இணை அமைச்­சர் நித்­யா­னந்த் ராய் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பதி­வான வழக்­கு­களில் அண்­மை­யில் கோவை­யில் நிகழ்ந்த குண்டு வெடிப்­புச் சம்­ப­வம் அடங்­கும் என எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதில் ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தேசிய புல­னாய்வு முகமை அனைத்து வழக்­கு­க­ளி­லும் நேர்­மை­யா­க­வும் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­ட­னும் விசா­ரணை நடத்தி வரு­கிறது. விசா­ரணை முடி­வுற்ற 67 பயங்­க­ர­வாத வழக்­கு­களில், 65 குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இரு வழக்­கு­களில் மட்­டும் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்," என்று அமைச்­சர் நித்­யா­னந்த் ராய் தெரி­வித்­துள்­ளார்.

தேசிய புல­னாய்வு முகமை மேற்­கொள்­ளும் விசா­ர­ணை­கள் ஒரு­த­லைப் பட்­ச­மாக இருக்­கக் கூடாது என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

இந்­நி­லை­யில், அந்த அமைப்பு விசா­ரித்து வரும் வழக்­கு­கள் குறித்து விளக்­கம் அளிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி இருந்­தன. இதை­ய­டுத்து, உள்­துறை அமைச்சு எழுத்­துப்­பூர்­வ­மாக விளக்­கம் அளித்­துள்­ளது.இதன் மூலம் புல­னாய்வு முகமை பார­பட்­ச­மின்­றிச் செயல்­ப­டு­வது தெரிய வரு­வ­தாக அமைச்­சர் குறிப்பிட்டுள்ளார்.