கியவ்: உக்ரேன் தலைநகர் கியவில் உள்ள குடிநீர், மின்சார ஆலைகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஆக அண்மைய தாக்குதலுக்குப் பிறகு அங்கு மீண்டும் அடிப்படை வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவும் கியவில் வெப்பமூட்டும் வசதிகள் மீண்டும் செயல்படுவதாக அதன் மேயர் விட்டாலி கிலிட்ச்கோ நேற்று கூறினார்.
ரயில் சேவைகள், குடிநீர் இணைப்பு போன்றவை செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா, கடந்த வெள்ளிக்கிழமை கியவ் மீது 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பாய்ச்சியது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா நடத்தியுள்ள மிகப் பெரும் தாக்குதல்களில் அதுவும் ஒன்று.
அத்தாக்குதல்களில் உக்ரேன் முழுவதும் மின்சார, தண்ணீர் வசதிகள் துண்டிக்கப்பட்டன.

